அமைச்சர் ஜெயக்குமாரை கண்டு நடுங்கிய புலி... தாய்லாந்தில் நடந்த அதிபயங்கர சம்பவம்!
தாய்லாந்து நாட்டிற்கு சென்றுள்ள அமைச்சர் ஜெயக்குமார், அங்குள்ள உயிரியல் பூங்காவில் புலிக்கு அருகில் அமர்ந்து வீடியோவுக்கு போஸ் கொடுத்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தாய்லாந்து நாட்டிற்கு சென்றுள்ள அமைச்சர் ஜெயக்குமார், அங்குள்ள உயிரியல் பூங்காவில் புலிக்கு அருகில் அமர்ந்து வீடியோவுக்கு போஸ் கொடுத்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாய்லாந்தில் உள்ள அங்குள்ள வனஉயிரினச் சாலைக்குச் சென்று விலங்குகளைப் பார்த்து ரசித்தார். பிறகு ரசித்ததுடன் விட்டால் பரவாயில்லை. புலியின் அருகில் சென்று குழந்தைபோல அதனுடன் விளையாடியுள்ளார்.
அதோடு அமைச்சர் ஜெயக்குமார் புலியின் அருகில் அமர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார். அவர் அதன் முதுகில் தடவியும் கொடுத்தார். அண்மையில் ஜப்பானுக்குச் சென்ற அமைச்சர் ஜெயக்குமார், அங்குள்ள வனஉயிரினச் சாலைக்குச் சென்று சிங்கக்குட்டி ஒன்றைக் கொஞ்சி மகிழ்ந்தார். சிங்கத்தைத் தொடர்ந்து தற்போது புலியுடன் கொஞ்சி மகிழ்ந்துள்ளதோடு, அந்த வீடியோ தமிழகத்து மீடியாக்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.