Asianet News TamilAsianet News Tamil

சிறுமியை அடித்து சாலையில் தூக்கி வீசிய கொடூரன்… பதைபதைக்க வைக்கும் வீடியோ!!

கேரள மாநிலம் மஞ்சேஷ்வரில் சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த சிறுமியை ஒருவர் அடித்து சாலையில் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் மஞ்சேஷ்வரில் சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த சிறுமியை ஒருவர் அடித்து சாலையில் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக எட்டு வயதுடைய சிறுமி தனது மாமாவிற்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த அபூபக்கர் சித்திக் என்பவர் அந்த சிறுமியை அடித்து சாலையில் தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளார். இதுக்குறித்து சிறுமி, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த போது யாரோ தன்னை அடித்ததாக கூறியுள்ளார். 

இதையும் படிங்க: ஆந்திராவில் பிச்சை எடுப்பது போல் வந்து, தெலுங்கு தேசம் கட்சி பிரமுகரை தாக்கிய மர்ம நபர்! - சிசிடிவி

இதை அடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த சிறுமியின் மாமா, சிறுமி தூக்கி வீசப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுக்குறித்த வீடியோ இணையத்தில் பரவி வைரலானது. அந்த வீடியோவில், குற்றம் சாட்டப்பட்ட சித்திக், சாலையின் மறுபுறம் நின்று கொண்டிருந்த சிறுமியை நோக்கி நடந்து சென்று சிறுமியை தாக்கி வலுக்கட்டாயமாகத் தூக்கி வீசியதை காணலாம். பின்னர் எதுவுமே நடக்காதது போல் திரும்பி நடப்பதையும் வீடியோவில் காண முடிந்தது. இதற்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு உள்ளூர் சேனல்கள் இந்த காட்சிகளை ஒளிபரப்பி குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை வெளுத்து வாங்கிய சீனா அதிபர் ஜி ஜின்பிங்; வைரல் வீடியோ!!

அதன்பேரில் போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். மேலும் அவர் மீது, இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 307 (கொலை முயற்சி) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் சிறுமிக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்ற போதிலும் விரிவான பரிசோதனைக்காக மங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Video Top Stories