Asianet News TamilAsianet News Tamil

'போனா வராது, பொழுது போனா கிடைக்காது' கடலூரில் ரூ.20க்கு விற்கப்படும் தக்காளி - வாடிக்கையாளர்கள் குஷி

கடலூர் மாவட்டம் செல்லங்குப்பம் பகுதியில் ராஜேஷ் என்பவர் தனது கடையில் தக்காளியை ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனை செய்வதால் அவரது கடையில் பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

 கடலூர் முதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். செல்லங்குப்பம் பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்தியாவில் பல மாநிலங்களில் தக்காளி விலை நூறு ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் அவருடைய காய்கறி கடையில்  20 ரூபாய்க்கு காய்கறி விற்பனை செய்து வருகிறார். மேலும் கடையின் உரிமையாளர் கூறுகையில், மொத்த விற்பனையாளரிடம் 1 கி. தக்காளியை ரூ.60க்கு வாங்கி ஏழை எளிய மக்களுக்கு ரூ.20க்கு சில்லறை விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார். இதனால் அக்கடையில் பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Video Top Stories