கொரோனாவின் லேட்டஸ்ட்… இன்னிக்கும் உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்…
தமிழகத்தில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை இன்றும் குறைந்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை இன்றும் குறைந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை இறங்கு முகத்தில் இருக்கிறது. நாள்தோறும் பாதிப்புகள் குறைந்து கொண்டே வருகிறது.
இந் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1218 ஆக குறைந்திருக்கிறது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1218 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. ஒட்டு மொத்தமாக 1,28,313 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன.
இன்று மட்டும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 9 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 6 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் பலியாகி உள்ளனர். ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 35,899 ஆக இருக்கிறது.
இன்னமும் கொரோனா சிகிச்சையில் 14,814 பேர் உள்ளனர். ஒரே நாளில் 1411 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.