Asianet News TamilAsianet News Tamil

ஞாயிற்றுக் கிழமை மின்சார ரயில்கள் ரத்து ! பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுவதாக அறிவிப்பு !!

சென்னையில் வரும் 21 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமா மினசார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

sunday electric train canclled
Author
Chennai, First Published Jul 19, 2019, 10:29 PM IST

சென்னையைப் பொறுத்தவரை பொது மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் உதவிகரமாக இருப்பது சென்னை மின்சார ரயில் சேவைதான். சென்னையில் அலுவலகம் செல்வோரும் அதிகம் நம்பியிருப்பதும் மின்சார ரயிலைத்தான்.

இதனிடையே  பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், ஜூலை 21ம் தேதி குறிப்பிட்ட நேரத்தில் சில மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை கடற்கரை- வேளச்சேரி வழித்தடத்தில் 36 ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. இதனால், காலை 7.50 மணி முதல் மதியம் 1.50 மணி வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. மதியம் 2 மணி முதல் இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்கும்.

sunday electric train canclled

இதேபோல், சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்திலும் காலை 10.30 முதல் மதியம் 3.10 மணி வரை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. 

மேலும் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-காஞ்சிபுரம் வழித்தடத்திலும் காலை 11 மணி முதல் மதியம் 1.50 மணி வரை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்து ரெயில் சேவை தொடங்கும் நேரத்தில் கூடுதலாக 8 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios