8 மாவட்டங்களில் பிச்சு உதற போகும் கனமழை…. கோவை, நீலகிரி மக்களே கவனம்..
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் நீடித்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் ஆகியவையே இதற்கு காரணம்.
இந் நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கோவை, நீலகிரியில் வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.சென்னையில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும். வங்கக்கடலில் அந்தமான் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கில் நாளை குறைந்த தாழ்வழுத்த பகுதி உருவாகலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.