Asianet News TamilAsianet News Tamil

மசாஜ் மையத்தில் விபச்சாரம்...! வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பெண்கள்...! 3 பேர் கைது...!

Prostitution at Madurai Massage Center - 3 arrest
Prostitution at Madurai Massage Center - 3 arrest
Author
First Published May 14, 2018, 11:55 AM IST


வெளி மாநில பெண்களை அழைத்து வந்து கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தியது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை அண்ணாநகரில் மசாஜ் மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மையத்தில், வெளிமாநித்தைச் சேர்ந்த பெண்கள் பெண்களை கட்டாயப்படுத்தி பாலியலில் ஈடுபடுத்தி வருவதாக அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மசாஜ் மையத்துக்கு போலீசார் சென்றனர். போலீசார் வருவதை அறிந்த மசாஜ் மையத்தின் உரிமையாளர் பாலா தப்பியோடி விட்டார்.

மசாஜ் மையத்தில் வேலை பார்த்து வந்த அழகேஸ்வரன் (32), அவருடைய மனைவி பவித்ரா (25), கேரளாவைச் சேர்ந்த சனூப் (23) ஆகிய மூன்று பேரிடமும் போலீசாரி விசாரணை நடத்தினர். விசாரணையில், மேற்கு வங்கம், கேரளத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மசாஜ் மையத்தில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி மதுரைக்கு அழைத்து வந்து பாலியலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. பின்னர் அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். மையத்தில் இருந்த பெண்கள் மூன்று பேரை மீட்டு, அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். 

Prostitution at Madurai Massage Center - 3 arrest

மையத்தில் இருந்த ஏடிஎம் அட்டை மூலம் பணம் செலுத்த உதவும் ஸ்வைப்பிங் மிஷினையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய மசாஜ் மையத்தின் உரிமையாளர் பாலாவை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், மசாஜ் மையத்துக்கு வருபவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் உள்ள மற்ற மசாஜ் மையங்களிலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மசாஜ் மையத்தில் அழகிகளை வைத்து விபசாரம் செய்யும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios