Asianet News TamilAsianet News Tamil

உடல் சார்ந்த தேடல் தேவையா..? கள்ளக்காதலுக்காக பெண்ணை "கார் ஏற்றி கொன்ற கொடூரன்"..! குடியாத்தத்தில் பரபரப்பு...

illegal affairs leads to death in gudiyattam
illegal affairs leads to death in gudiyattam
Author
First Published May 20, 2018, 2:50 PM IST


உடல் சார்ந்த தேடல் தேவையா..? கள்ளக்காதலுக்காக பெண்ணை "கார் ஏற்றி கொன்ற கொடூரன்"..! குடியாத்தத்தில் பரபரப்பு...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கிராமம் கொட்டமேட்டா.இங்கு வசித்து வரும் தம்பதிகள் மணிகண்டன் மற்றும் சுமதி.

மணிகண்டன் பெங்களூரில் பெயின்டராக வேலை செய்து வருகிறார்.

மனைவி சுமதியோ கிராமத்திலேயே தங்கி வந்துள்ளார். இந்நிலையில் வசந்த் என்ற  நபர் சுமதிக்கு தேவையான சில உதவிகளை செய்து வந்துள்ளார்.வசந்த் சுமதியின் தூரத்து உறவுகாரரும் கூட.

illegal affairs leads to death in gudiyattam

மணிகண்டன் இல்லாத சமயத்தில் மிகவும் உதவியாக இருந்த வசந்தை நம்பி அவரது காரில் வெளியில் செல்ல தொடகியுள்ளார்..இப்படியாக வளர்ந்துள்ளது இவர்களுடைய  கள்ளக்காதல்.

ஒரு தருணத்தில் இந்த விவகாரம் கணவர் மணிகண்டனுக்கு தெரிய வர அவர் மனைவி சுமதியை எச்சரித்து உள்ளார்.

illegal affairs leads to death in gudiyattam

பின் தான் செய்த தவற்றை உணர்ந்து கணவரிடம் மன்னிப்பு கேட்டு நல்ல முறையில் வாழ்க்கை சென்று வந்து உள்ளது.

இதன் காரணமாக சுமதி வசந்த் உடன் பேசுவதை நிறுவிட்டு அவரை பார்ப்பதையும் முற்றிலுமாக தவிர்த்து  வந்துள்ளார் 

இதனால் ஆத்திரம் அடைந்த வசந்த், சரியான நேரத்திற்காக காத்திருந்து உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிகிழமையன்று கணவர் மணிகண்டனுடன்   கொட்டமேட்டா கிராமத்தில் இருந்து மோடிகுப்பம் வழியாக குடியாத்தம் வந்துள்ளனர்.

illegal affairs leads to death in gudiyattam

கணவனும் மனைவியும் இருசக்கர வாகனத்தில் தனியாக செல்வதை கண்டு ஆத்திரம் அடைந்த வசந்த், அவர்களை தன் காரில் பின் தொடர்ந்து உள்ளார்

பிறகு  வேகமாக காரை இயக்கி, இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளார் . இதில் சுமதி சம்பவ இடத்திலேயே பலி ஆகி உள்ளார்

கணவர் மணிகண்டன் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

உடல் சார்ந்த தேவைக்காக உயிரை பறிக்கும் நிலை கூட ஏற்படும் என்பது, மற்றவர்களுக்கும் இது ஒரு பாடமாக  உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios