கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவிற்கு விமானங்கள் இயக்கப்படும் நிலையில், மூன்றாவது நாடாக இண்டிகோ அபுதாபிக்கு விமான சேவையைத் ஆரம்பிக்கிறது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவனம் தனது சர்வதேச விமான சேவையை அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இண்டிகோ நிறுவனம் கோயம்புத்தூரில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவையை இயக்கத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இதன்படி, இண்டிகோ நிறுவனத்தின் சர்வதேச விமானங்கள் கோயம்புத்தூர் மற்றும் அபுதாபி இடையே ஆகஸ்ட் 10 முதல் இயக்கப்படும். செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வாரத்திற்கு 3 நேரடி விமானங்கள் இயக்கப்படும்.

ஏற்கெனவே கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவிற்கு விமானங்கள் இயக்கப்படும் நிலையில், மூன்றாவது நாடாக இண்டிகோ அபுதாபிக்கு விமான சேவையைத் ஆரம்பிக்கிறது.

வங்கி சர்வரை ஹேக் செய்து ரூ.16 கோடி அபேஸ்! சைபர் கிரிமினல்கள் கைவரிசை!

மேற்குத் தமிழகப் பகுதியில் பல சங்கங்களின் தொடர் முயற்சியால் இந்த புதிய விமான சேவை சாத்தியமாகியுள்ளது. அரசாங்கம், விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதன் மூலம் இந்த புதிய விமான சேவையைத் தொடங்க முடிகிறது என்றும் இண்டிகோ கூறியுள்ளது.

கோயம்புத்தூரில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கு பயணம் செய்ய விரும்பும் பயணிகளுக்கு போக்குவரத்து விசா, பேக்கேஜ் சேவைகள் மற்றும் பிற வசதிகள் எளிதாகக் கிடைக்கும் வகையில் அபுதாபியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என இண்டிகோ தெரிவித்துள்ளது.

துபாய் - கோயம்புத்தூர் இடையே ஃப்ளை துபாயை (Fly Dubai) நேரடி விமான சேவையைத் தொடங்குவது குறித்து பரிசீலனை நடைபெற்று வருகிறது என இண்டிகோ நிறுவனத்தின் அறிவிப்பில் கூறப்பபட்டுள்ளது.

கேலக்ஸி ரிங்கை அடிச்சுத் தூக்கும் போட் ஸ்மார்ட் ரிங்! டக்கரான டிசைனில் விரைவில் ரிலீஸ்