Asianet News TamilAsianet News Tamil

ipl 2022 rr vs rcb:ரியான் பராக், ஹர்சல் படேல் இடையே களத்தில்கடும் வாக்குவாதம்: கை குலுக்க மறுத்த ஆர்சிபி வீரர்

ipl 2022 rr vs rcb : புனேயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின்39-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்ரவுண்டர் ரியான் பராக், ஆர்சிபி பந்துவீச்சாளர் ஹர்சல் படேல் இருவருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. 

ipl 2022 rr vs rcb :  Riyan Parag, Harshal Patel Involved In Heated Altercation During Match 39
Author
Pune, First Published Apr 27, 2022, 10:26 AM IST

புனேயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின்39-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்ரவுண்டர் ரியான் பராக், ஆர்சிபி பந்துவீச்சாளர் ஹர்சல் படேல் இருவருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. 

போட்டி முடிந்தபின் ரியான் பராக் கைகலுக்க வந்தபோது, ஹர்சல் படேல் கைகுலுக்க மறுத்துவிட்டு சென்றார்.

புனேயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தி்ல ஆர்சிபி அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது. 145  ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியை தங்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் 19.3 ஓவர்களில் 115 ரன்களில் சுருட்டி 29 ரன்களில் ராஜஸ்தான் வென்றது.

ipl 2022 rr vs rcb :  Riyan Parag, Harshal Patel Involved In Heated Altercation During Match 39

ராஜஸ்தான் அணி இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில்நீட்கிறது, ஆர்சிபி அணி 10 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது.

இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் வழக்கமான அதிரடி வீரர் ஜாஸ் பட்லர்(8), படிக்கல்(7) ரன்களில் விரைவாக ஆட்டமிழந்தனர். ஒன்டவுனில் களமிறக்கப்பட்ட ரவிச்சந்திர அஸ்வின் அதிரடியாக ஆடி 17 ரன்களில் ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணிக்கு விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தாலும் மறுமுனையில் ரியான் பராக் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து, 31 பந்துகளில் 56 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பீல்டிடிங்கிலும் கலக்கிய ரியான் பராக் 4 கேட்சுகளை பிடித்து அசத்தியால் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஆர்சிபி அணியிடம்  நல்லபேட்டிங் லைன்அப் இருந்தும் எந்த வீரரும் பேட்டிங் செய்யவில்லை என்பதே தோல்விக்குக் காரணம். விராட் கோலியை சில போட்டிகளுக்கு அமரவைத்து ஓய்வு எடுக்க வைப்பதில் தவறவில்லை. இந்த சீசனில் 8 ஆட்டங்களில் ஆடிய கோலி இன்னும் 150 ரன்களைக் கூட தாண்டவில்லை. 

ipl 2022 rr vs rcb :  Riyan Parag, Harshal Patel Involved In Heated Altercation During Match 39

மேக்ஸ்வெல்(0), டூப்பிளசிஸ்(23)பட்டிதார்(16), ஷாபாஸ் அகமது(17), தினேஷ் கார்த்திக்(6) என முக்கிய வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்ததே குறைந்த ஸ்கோரைகூட சேஸிங் செய்ய முடியாமல் போனதற்கு காரணமாகும். ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சாளர்கள் தங்கள் கடமையைச் செய்து குறைந்தரன்னில் ராஜஸ்தானை சுருட்டிக்கொடுத்தார்கள். ஆனால், பேட்ஸ்மேன்கள் யாரும் பொறுப்புடன் ஆடாததே தோல்விக்குக் காரணம்.

 

இதில் ராஜஸ்தான் அணிக்கு கடைசி ஓவரை ஆர்சிபி வீரர் ஹர்சல் படேல் வீசினார். களத்தில் இருந்த ரியான் பராக் 2 சிக்ஸர்கள், ஒருபவுண்டரி என 18 ரன்களை படேல் பந்துவீச்சில் வெளுத்துவாங்கினார். போட்டி முடிந்து வீரர்கள் செல்லும்போது, ரியான் பராக்கிடம் ஹர்சல் படேல் ஏதோ பேசினார். அதற்கு பதிலாக ரியான் பராக்கும் பேசினார். இதனால் இருவருக்கும் இடையே காரசார வாக்குவாதம் களத்தில் ஏற்பட்டது. இதைப் பார்த்த மற்ற வீரர்கள் ரியான் பராக்கையும், ஹர்சல் படேலையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

ipl 2022 rr vs rcb :  Riyan Parag, Harshal Patel Involved In Heated Altercation During Match 39

இருவரின் கோபமும் இதோடு முடியவில்லை. ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றபின் இரு வீரர்களும் ஒருவொருக்கு ஒருவர் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் அனைத்து வீரர்களுக்கும் கைகுலுக்கிவந்தார், அப்போது ஹர்சல் படேலிடம் ரியான் பராக் கை நீட்டியபோது, அவர் ரியான் பராக்கை கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிட்டார். இதனால் களத்தில் நடந்த சம்பவத்தை மறக்காமல் ஹர்சல் படேல் இருப்பது தெரிந்தது.

விளையாட்டில் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் வெளுத்துவாங்குவதும், பேட்ஸ்மேனை விரைவாக பந்துவீச்சாளர்கள் டக்அவுட் செய்வதும் இயல்பு.இதை மனதில் வைத்துக்கொண்டு சண்டையிட்டாலும் அதை உடனே மறந்துவிட்டு பழகுவதுதான் ஜென்டில்மேன் கேமான கிரிக்கெட்டுக்கு அழகு. ஆனால், அது ஹர்சல்படேலிடம் நேற்று மிஸ்ஸிங்
 

Follow Us:
Download App:
  • android
  • ios