Asianet News TamilAsianet News Tamil

DMK FILES பார்ட் 2 கோவையில் வெளியிடப்படும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

DMK Files 2ம் பாகம் கோவையில் வெளியிடப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதில் திமுகவை சார்ந்த மற்றும் சாராத நபர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

dmk files part 2 will release in coimbatore says bjp state president annamalai
Author
First Published May 27, 2023, 9:54 AM IST

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 28ம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நம்முடைய செங்கோல் அங்கே செல்ல இருக்கிறது. 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி இரவு 10:45 மணிக்கு சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ஓதுவார்கள் மற்றும் நாதஸ்வர வித்வான்கள் எல்லாம் அதனை எடுத்துச் சென்று மவுன்ட்பேட்டனிடம் கொடுத்து திரும்ப வாங்கி மீண்டும் நேருவிடம் கொடுத்து மக்களாட்சியாக அது வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த செங்கொலை நாம் எங்கும் பார்த்தது கிடையாது. 

தற்போது அந்த செங்கோல் பாராளுமன்றத்தில் இருக்கப் போகிறது. வருகின்ற காலத்தில் செங்கோல் இல்லாமல் ஆட்சி இல்லை என்ற அளவிற்கு பிரதமர் பெருமை சேர்த்துள்ளார். இதனை கடந்த சில தினங்களாக எதிர்க்கட்சியினர் அரசியலாக்கி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதீனமே விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து எம்பிக்களும் இதில் பங்கேற்க வேண்டும். இந்த பாராளுமன்ற கட்டிடம் புதிதாக வரக்கூடிய எம்பி களுக்கும் சேர்த்தே விசாலமாக கட்டப்பட்டுள்ளது. இது போன்ற ஒன்று நூறு வருடங்கள் கழித்தாலும் கிடைக்காது. 

எம்பிக்கள் இதில் பங்கேற்கவில்லை என்றால் இது ஒரு சரித்திர பிழையாக மாறிவிடும். எந்த ஒரு அரசியலையும் சாராத பிரதமர், அவர் ஒரு கட்சியை சார்ந்திருந்தாலும் பிரதமர் என்கின்ற அந்த வார்த்தை அரசியல் கட்சியை தாண்டி இருக்கக்கூடிய ஒரு வார்த்தை. தற்போது உள்ள எதிர்க்கட்சியினர் நீலி கண்ணீர் வடிக்கிறார்கள். 

தமிழகத்தை தற்போது மிகப்பெரிய அளவில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான். அவர்கள் தவறு செய்து இருக்கிறார்கள். அதனால் சோதனை நடைபெறுகிறது. முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பொழுது கரூர் பொது கூட்டத்தில் தமிழ்நாட்டில் ஊழல் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் என அவரை கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அவரது சகோதரர் அசோக்கின் பெயரையும் கூறிவிட்டு வந்துள்ளார். 

ஐடி ரெய்டு கேள்விகளை தவிர்க்க பத்திரிகையாளர்களை பார்த்ததும் ஓட்டம் பிடித்த அமைச்சர், கனிமொழி

தற்போது திமுகவில் செந்தில் பாலாஜி இணைந்தவுடன் அவர் ஒரு புண்ணியவான் என்று ஆர் எஸ் பாரதி கூறுகிறார். இதனை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த சோதனையானது இறுதி கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. பீகாரில் எல்லாம் சோதனை நடைபெறும் பொழுது யாருக்கும் ஒரு கீறல் கூட விடவில்லை. ஆனால் தற்பொழுது கரூரில் சோதனைக்கு சென்ற அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முழு பொறுப்பையும் திமுக தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். தங்களிடம் ஏற்கனவே கூறிவிட்டு வந்திருக்க வேண்டும் என நம் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் கூறுகிறார். 

அவர்களிடம் நான் ஒன்று கேட்கிறேன். எங்காவது சோதனைக்கு செல்வதை கூறிவிட்டு வருவார்களா? என்னுடைய தகவலின்படி கரூரில் சோதனை மேற்கொண்டு 1 மணி நேரம் 12 நிமிடம் கழித்து தான் காவல்துறையினர் அங்கு சென்று உள்ளார்கள். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு என்பது இந்தியாவில் பேசு பொருளாக மாறி உள்ளது. முதலமைச்சர், சட்டமன்ற எவ்வாறு உள்ளது என்பதை கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆர் எஸ் பாரதி மீண்டும் என்னை வம்புக்கு இழுத்து உள்ளார். 

ஒரு பக்கம் அண்ணாமலை சாதாரண ஆள் என்று கூறிவிட்டு சோதனை என்று வரும்போது அதற்கும் அண்ணாமலை தன் காரணம் என்று கூறுகிறார். பி டி ஆரின் ஆடியோ விவகாரத்தில் ஏதேனும் விவாதத்தை முன் வைத்தீர்களா? அப்போதெல்லாம் எதுவும் கூறாமல் செந்தில் பாலாஜி என்று வரும்போது விவாதம் செய்தால் யாரிடம் பணம் இருந்தாலும் அவர்களுக்கு திமுகவில் மரியாதை என்று மக்களுக்கு புரிகிறது. ஆர் எஸ் பாரதி கூறியதற்கான பதில் 2024ல் இருக்கும்.

பிரபல யூடியூபர் இர்ஃபானின் கார் மோதி பெண் உயிரிழப்பு… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

DMK files எவ்வளவு நீளமாகக உள்ளது என்பதை நீங்கள் பாருங்கள். அதன் இரண்டாம் பாகம் முழுவதுமே திமுக ஆட்சிக்கு வந்த பிறகு என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பது தான் அதில் இருக்கும். என் மண் என் மக்கள் என்ற பயணம் ஜூலை ஒன்பதாம் தேதி துவங்க உள்ளது. அந்த பயணத்தில் ஊழலை பற்றி மட்டும்தான் பேச உள்ளோம். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு செல்லும் பொழுதும் அங்குள்ள திமுகவின் ஊழலை பற்றி தான் பேசப் போகிறோம். 

DMK FILES 2ல் திமுகவை சேர்ந்தவர்களும் திமுகவை சாராதவர்களும் இருக்கிறார்கள். கஷ்டப்பட்டு ஒவ்வொருவரும் பொறியாளர், மருத்துவரானால் கலைஞரின் பேனா மையில் தான் மருத்துவர் ஆனார். கலைஞரின் பேனா மையில் தான் பொறியாளர் ஆனார் என ஏன் கூறுகிறீர்கள்? இன்னொருவர் குழந்தைக்கு பெயர் வைப்பதா? அசிங்கமாக இல்லையா? ஜூன் 10ஆம் தேதிக்குள் பாஜக சார்பில் வெள்ளை அறிக்கை அளிக்க உள்ளோம். அந்த வெள்ளை அறிக்கையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான திட்டங்கள், 75% டாஸ்மாக்கை மூடுவது, கள் மூலமாக வரக்கூடிய வருமானம் வருமான இழப்பை சரி செய்வது அனைத்தையும் நாம் கூறியுள்ளோம். 

அதை வைத்து ஒரு டிபைட் நடக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. DMK FILES 2 வை கோவையில் வெளியிடுவோம். என்னை எந்த அரசியலில் கட்சி இருக்கக் கூறுகிறதோ ஒரு ரூபாய் பணம் கூட அளிக்காமல் தேர்தலில் நிற்பேன்.தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் செய்யும் ஊழலை சுட்டிக் காட்டுவது போல் ஆட்சியில் இருந்தவர்கள் செய்ததையும் கூற வேண்டிய கடமை உள்ளது. ஹிஜாப் அணியக்கூடாது என மருத்துவரை பாஜகவினர் மிரட்டியதாக வந்த செய்தி குறித்து கேள்வி எழுப்பியதற்கு, பத்திரிக்கையில் வந்திருக்கக்கூடிய செய்தி தவறானது, இருதரப்பினரின் விளக்கத்தையும் நாம் கேட்க வேண்டும். இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு உரிமை உள்ளது அதனை கேட்பதற்கு பாஜகவிற்கு உரிமை இல்லை. இங்கு நடந்திருக்க கூடிய சம்பவம் என்பது, வேறு. அங்கிருந்தவர் ஹிஜாப் பற்றி பேசவில்லை ஏன் தாமதமாக மருத்துவர்கள் வந்தார்கள் என்றுதான் கேள்வி எழுப்பியுள்ளார். பிறகு அது அரசியல் சண்டையாக மாறி உள்ளது என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios