Asianet News TamilAsianet News Tamil

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஏற்படும் மாற்றம் 2026ல் தேர்தலில் திராவிட அரசியலை வேரோடு அகற்றும்- அண்ணாமலை

 வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் ஏற்படவிருக்கும் மாற்றம், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திராவிட அரசியலை வேரோடு அகற்ற அடிப்படையாக அமையும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Annamalai has said that Dravidian politics will be eliminated in the 2026 elections KAK
Author
First Published Mar 3, 2024, 7:15 AM IST

சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர்

 இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில்  ‘தேசம் காப்போம், தமிழை வளர்ப்போம்’ என்ற தலைப்பில் மாநில மாநாட்டு நடைபெற்றது.  இதில் பாஜக மாநில தலைவர் அண்ணமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், அப்போது பேசிய அவர், 2024 ஆம் ஆண்டு நாம் பேசும், பண அரசியலுக்கு எதிரான, ஊழலற்ற, நேர்மையான அரசியலைக் கொள்கைகளாகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர்,

பெரம்பலூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக, கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்கும் மக்களுக்கும் செய்துள்ள பணிகள் போற்றுதலுக்குரியவை. தனது சொந்தப் பணம் சுமார் 127 கோடி ரூபாய், தொகுதி மேம்பாட்டிற்காகச் செலவு செய்து, இந்தியாவின் தலைசிறந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருக்கிறார். 

Annamalai has said that Dravidian politics will be eliminated in the 2026 elections KAK

3வது முறையாக மோடி பிரதமராவார்

பாரிவேந்தர் முயற்சியால், பெரம்பலூருக்கு ரயில் போக்குவரத்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் புதிதாகத் தொடங்கவிருக்கும் 100 சைனிக் பள்ளிகளில் முதல் பள்ளி, பெரம்பலூரில் அமைக்கவும், தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்யத் தயாராகவிருக்கிறார். மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கும்போது, பாரிவேந்தர் மீண்டும் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் கொண்டு வர முழுமுயற்சி மேற்கொண்டுள்ள அத்தனை திட்டங்களையும், அவரே தொடங்கி வைக்க வேண்டுமென்பதே அனைவரின் ஆசையும் விருப்பமும். அதனை நிறைவேற்ற அனைவரும் நிச்சயம் உழைப்போம்.

Annamalai has said that Dravidian politics will be eliminated in the 2026 elections KAK

திராவிட அரசியல் வேரோடு அகற்றப்படும்

இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில மாநாட்டின் கொள்கையான, தமிழ் வளர்ச்சி,  நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் கடந்த பத்து ஆண்டு கால ஆட்சியில்தான் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும், தமிழ் மொழியின் பெருமையை நமது பாரதப் பிரதமர் அவர்கள் கொண்டு செல்கிறார். தமிழ் மொழியின் புகழ் மேலும் பரவ, நமது பிரதமர் மோடி அவர்கள், மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்.  

மாநாட்டின் மற்றொரு கொள்கையான தேசம் காப்பது, பிரிவினை பேசும் திராவிட அரசியலை அழிப்பதில்தான் முழுமை பெறும். வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் ஏற்படவிருக்கும் மாற்றம், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திராவிட அரசியலை வேரோடு அகற்ற அடிப்படையாக அமையும் என அண்ணாமலை தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

பாஜகவை கழற்றிவிட்டு அதிமுகவுடன் புதிய தமிழகம் கூட்டணி? என்ன காரணம் தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios