Asianet News TamilAsianet News Tamil

அதிர்ச்சி..! பட்டபகலில் வீட்டில் பாலியல் தொழில்..மாறுவேடத்தில் சென்ற போலீஸ்..அதுக்கு அப்பறம் என்னாச்சு..?

தில்லியில் வீட்டில் பாலியல் தொழிலில் நடத்தி வந்த நான்கு பெண்கள் உட்பட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 
 

Delhi Police busts sex racket in Dilshad Colony, arrests five
Author
Delhi, First Published Apr 22, 2022, 4:37 PM IST

தில்லியில் வீட்டில் பாலியல் தொழிலில் நடத்தி வந்த நான்கு பெண்கள் உட்பட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். வட கிழக்கு தில்லியில், தில்ஷாத் காலணி பகுதியில் வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வருவதாக போலீசார் ரகசிய தகவல்கிடைத்தது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் ஒருவர், மாறுவேடத்தில் வாடிக்கையாளர் போல் அங்கு சென்று சோதனை செய்தார்.அப்போது அந்த வீட்டில் இருந்த தர்ஷன் சைனி எனும் நபர், இவர்களில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை அறிமுகம் செய்து வைத்தார். 

பின்னர், அந்த பெண் இவரை அந்த வீட்டின் கீழ் தளத்திற்கு அழைத்து சென்று அங்கு இருந்த மூன்று சிறுமிகளை காண்பித்துள்ளார். மேலும் அவர்களிடம் செல்வதற்கு ஒரு நாளைக்கு ரூ1,500 என்றும் விலை பேசியுள்ளார்.  இதனையடுத்து, சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்துக்கொண்ட போலீசார், சக காக்கிகளுக்கு சிக்னல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து அப்பகுதியில் பதுங்கியிருந்த போலீசார், விரைந்து அந்த வீட்டிற்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். இதில் நான்கு பெண்கள், ஒரு ஆண் என 5 பேரை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வீட்டின் உரிமையாளர் தீபா இன்னும் தலைமறைவாக உள்ளார். மேலும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios