பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு செருப்பு மாலை... பதிலுக்கு கிடைத்தது செவுட்டில் அறை!!!
காலைத் தொட்டு வணங்கி எழுந்தபோது அந்த நபர் திடீரென வேட்பாளரின் கழுத்தில் செருப்பு மாலை அணிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளர் திலிப் ஷெகாவத் அந்த நபரை கடுமையாக தாக்கினார்.
மத்திய பிரதேசத்தில் வரும் 28-ம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகின்றது. இதற்காக கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பாஜக எம்எல்ஏவும் நகடா தொகுதியின் பாஜக வேட்பாளருமான திலிப் ஷெகாவத், கடந்த 19-ம் தேதி வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது பெரியவர்களின் காலைத் தொட்டு வணங்கி வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். காலைத் தொட்டு வணங்கி எழுந்தபோது அந்த நபர் திடீரென வேட்பாளரின் கழுத்தில் செருப்பு மாலை அணிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளர் திலிப் ஷெகாவத் அந்த நாரை கடுமையாக தாக்கினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.