மாம்பழம் பறித்த சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை...!
உரிமையாளருக்கு தெரியாமல் மாம்பழம் பறித்த சிறுவன் ஒருவன், தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.
பீகார் மாநிலம், ககாரியா மாவட்டம், பத்ரஹா கிராமத்தில் மாந்தோப்பு ஒன்று உள்ளது. இந்த மாந்தோப்பில் உள்ள மாம்பழத்துக்கு ஆசைப்பட்ட சிறுவன் சத்யம் குமார், அதன் உரிமையாளருக்கு தெரியாமல் மாம்பழம் பறித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த சிறுவன், மர்ம நபர் ஒருவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான். துப்பாக்கி குண்டு தலையில் பாய்ந்த நிலையில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுவனை துப்பாக்கியால் சுட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சிறுவனை துப்பாக்கியால் சுட்ட குற்றவாளியை தீவிரமாக அவர்கள் தேடி வருகின்றனர்.
மாம்பழம் பறிக்க சென்ற சிறுவனை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.