Asianet News TamilAsianet News Tamil

தினமும் குளிர்பானங்களை உட்கொள்ளும் பெண்களுக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம்.. எப்படி தடுப்பது?

தினமும் சர்க்கரை கலந்த குளிர்பானங்களை உட்கொள்ளும் பெண்களுக்கு கல்லீரல் புற்றுநோய்  போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Women who consume soft drinks daily have a higher risk of liver cancer.. How to prevent? Rya
Author
First Published Jan 31, 2024, 2:20 PM IST

உட்கார்ந்த வாழ்க்கைமுறை, மோசமான உணவு முறை ஆகியவை காரணமாக இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் தினமும் ஒருமுறை அல்லது அதற்கு மேல் சர்க்கரை கலந்த குளிர்பானங்களை உட்கொள்ளும் பெண்களுக்கு கல்லீரல் புற்றுநோய்  போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின்  ப்ரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆய்வில் பெண்கள் சுகாதார முன்முயற்சியில் இருந்து கிட்டத்தட்ட 100,000 மாதவிடாய் நின்ற பெண்கள் கலந்துகொண்டனர். இவர்கள் 20 ஆண்டுகளாக கண்காணிக்கப்பட்டனர். இந்த ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் சுய-அறிக்கை கல்லீரல் புற்றுநோய் நிகழ்வு மற்றும் நாள்பட்ட கல்லீரல் நோயால் ஏற்படும் இறப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

கத்திரிக்காயை இனிமே வேண்டாம்னு சொல்லாதீங்க.. அவ்வளவு நன்மைகள் இருக்கு..!

சர்க்கரை மற்றும் சோடா அதிகமாக உள்ள குளிர்பானங்கள் ஒரு நபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்பது இந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. உடல் பருமன், நீரிழிவு, புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, செரிமான பிரச்சினைகள் மற்றும் எலும்பு ஆரோக்கிய பிரச்சனைகள் ஆகிய பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. கல்லீரல் புற்றுநோய், அதிக ஆபத்துள்ள கர்ப்பம், இதய நோய்கள் கீல்வாதம் போன்ற அபாயத்தில் உள்ள ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு ஏற்படும் ஆபத்து இன்னும் அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

அதிக அளவு சர்க்கரைகள் உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சனைகள் ஆண், பெண் என இருவருக்கும் தீங்கு விளைவிப்பதாக இருந்தாலும் பெண்களின் கர்ப்பத்தில் தீமைகளை ஏற்படுத்துகிறது என்பதும் தெரியவந்துள்ளது.

புற்றுநோய் அபாயம் அதிகம் 

சமீபத்திய ஆய்வுகள், தினசரி சோடாவை உட்கொள்ளும் பெண்களுக்கு கல்லீரல் புற்றுநோயின் ஆபத்தை அதிகரிப்பதாக பரிந்துரைத்துள்ளன. சர்க்கரை இல்லாத குளிர்பானங்கள் அஸ்பார்டேம் என்ற செயற்கை இனிப்பை பயன்படுத்துகின்றன, இது புற்றுநோய் உட்பட  பல வளர்சிதை மாற்ற நோய்களை ஏற்படுத்துகிறது. இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் லாங்காங் ஜாவோ பேசிய போது “ சர்க்கரை-இனிப்பு பான உட்கொள்ளல் மற்றும் நாள்பட்ட கல்லீரல் நோய் இறப்பு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைப் புகாரளிக்கும் முதல் ஆய்வு இதுவாகும்" என்று தெரிவித்தார்.

குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன?

முதுமையை துரிதப்படுகிறது

அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் படி, ஒரு நாளைக்கு 20 அவுன்ஸ் சோடாவை உட்கொள்வது 4 மற்றும் அரை ஆண்டுகளுக்கும் மேலாக முதுமையை துரிதப்படுத்துகிறது. குளிர்பானங்களில் அதிக கலோரிகளே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதய நோய்

அதிகப்படியான சோடா சீரம் பொட்டாசியம் குறைவதற்கு வழிவகுக்கிறது, இது அரித்மியா போன்ற இதய நோய்களுக்கு ஆளாகிறது.

கீல்வாதத்தின் ஆபத்து

தினசரி சோடாவை உட்கொள்ளும் பெண்களுக்கு கீல்வாதம் நோய் ஏற்படும் ஆபத்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குளிர்பானங்களின் முக்கிய பொருட்களில் ஒன்று பாஸ்பாரிக் அமிலம், இது எலும்புகளில் இருந்து கால்சியத்தை வெளியேற்றுகிறது.

உணவில் சேர்க்கக்கூடிய ஆரோக்கியமான பானங்கள்

உடல் பருமன், வகை 2 நீரிழிவு மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க, சர்க்கரை பானங்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் அல்லது குறைத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகினரனர். சர்க்கரை குளிர்பானங்களுக்கு பதிலாக ஆரோக்கியமான பழச்சாறுகளை குடிக்கவும் அறிவுறுத்தி உள்ளனர். 

திராட்சை ஜூஸ் : அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களை தவிர்க்க சிறந்த மாற்றுகளை நீங்கள் தேர்வு செய்யலாம். திராட்சைப்பழத்தில் நரிங்கின் மற்றும் நரிங்கெனின் போன்ற இரண்டு முதன்மை ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்திருப்பதால் திராட்சை ஜூஸ் குடிக்கலாம். இவை வீக்கத்தைக் குறைத்து கல்லீரல் செல்களைப் பாதுகாப்பதன் மூலம் உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

சிட்ரஸ் பழங்கள் ஆரோக்கியம் தான்.. ஆனால் இவற்றுடன் சாப்பிட்டால் ஆபத்து நிச்சயம்..!!

பீட்ரூட் சாறு: பீட்ரூட் சாறு உட்கொள்வதும் மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள நைட்ரேட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஆக்ஸிஜனேற்ற சேதம் மற்றும் கல்லீரலின் வீக்கத்தைக் குறைக்க உதவும்.

எலுமிச்சை ஜூஸ். எலுமிச்சை தண்ணீரைக் குடியுங்கள், ஏனெனில் எலுமிச்சையில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பல கல்லீரல் நோய்களைத் தடுக்க உதவுவதோடு கல்லீரலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவும்.

கிரீன் டீ: க்ரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயால் (NAFLD) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கல்லீரல் நொதி அளவைக் குறைக்க உதவுகின்றன.

பால்: நீங்கள் பால் பொருட்கள் அலர்ஜி இல்லாதவராக இருந்தால், இது உங்களுக்கு புரதம் மற்றும் கால்சியத்தின் சிறந்த ஆதாரமாக பால் இருக்கும்.

இளநீர்  கிட்டத்தட்ட பூஜ்ஜிய கலோரிகளுடன் கால்சியம் நிறைந்துள்ளது, உடல் எடையை குறைக்க விரும்பும் பெண்களுக்கு இது விரும்பத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios