Asianet News TamilAsianet News Tamil

டெங்குவின் புதிய DEN 2 மாறுபாடு.. அறிகுறிகள் என்ன? நோயை எப்படி தடுப்பது?

கொசுக்களால் பரவும் டெங்கு வைரஸின் DEN-2 மாறுபாடு காரணமாக தற்போது பாதிப்பு அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

The new DEN 2 variant of Dengue.. What are the symptoms? How to prevent disease? Rya
Author
First Published Sep 14, 2023, 3:12 PM IST

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே பருவமழை தொடர்பான நோய்களும் அதிகரிக்க தொடங்க்கும். அந்த வகையில், தற்போது நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்குவங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொசுக்களால் பரவும் டெங்கு வைரஸின் DEN-2 மாறுபாடு காரணமாக தற்போது பாதிப்பு அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

நொய்டாவில் இருந்து அனுப்பப்பட்ட மாதிரிகளில் இந்த மாறுபாடு சமீபத்தில் கண்டறியப்பட்டது. நிபுணர்களின் கூற்றுப்படி, DEN-1 திரிபு தலைவலி, காய்ச்சல், சளி ஆகியவற்றை ஏற்படுத்துகிறது, ஆனால் DEN-2 அதிக காய்ச்சல், வாந்தி போன்றவற்றுக்கு வழிவகுக்கிறது. ஆனால் அதன் தீவிரத்தின் அடிப்படையில் கவலைகள் அதிகரித்து வருகின்றன. .

DEN-2 எவ்வளவு தீவிரமானது?

டெங்கு வைரஸின் இந்த புதிய மாறுபாடு ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். DENV-1, DENV-2, DENV-3 மற்றும் DENV-4 என மொத்தம் 4 வகை டெங்கு வைரஸ்கள் உள்ளன என்றும் ஆனால் இவற்றில் DEN-2 இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகரிப்புக்கு காரணமாகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இது மிகவும் தீவிரமான மாறுபாடு என்று கூறும் அவர்கள், , இது டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சலை கூட ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர். DENV-2 டெங்கு மாறுபாடு பல உறுப்பு செயலிழப்புக்கும் வழிவகுக்கும் என்றும் இந்த வகை டெங்கு பாதிப்பு உறுதியானால் ஆபத்து சற்று அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். ரத்தக்கசிவு காய்ச்சலால் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றாலும், இது கடுமையான விகாரம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

டெல்லியில் பரவும் டெங்கு, வைரல், டைபாய்டு, பன்றிக் காய்ச்சல்; மருத்துவர்கள் எச்சரிக்கை; அறிகுறிகள் என்னென்ன?

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் 

  • அதிக காய்ச்சல்
  • குமட்டல்
  • வாந்தி
  • கண்களுக்குப் பின்னால் வலி
  • மூட்டு வலி
  • தொடர்ந்து தலைவலி

தடுப்பு நடவடிக்கைகள்

  • முழு கை ஆடைகள் அணிய வேண்டும்
  • சரியான சுகாதாரத்தை பராமரிக்கவும்
  • சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருங்கள்
  • தண்ணீர் தேங்கக்கூடாது
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்ணுங்கள்
  • நீரேற்றத்துடன் இருக்க வேண்டும்

உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை பராமரிக்க நீரேற்றம் முக்கியமானது. திரவங்களை அதிகளவில் நுகர்வதால் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது, விரைவான மீட்புக்கு உதவுகிறது. பச்சை இலைக் காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த காய்கறிகள் இரத்தத்தில் உள்ள பிளேட்லெட் எண்ணிக்கையை மேம்படுத்தவும்.
மேலும் பிளேட்லெட்டுகளை அதிகரிக்க, ஊட்டச்சத்துக்கள், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும். குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது உதவும். கிவி, செர்ரி, ஆப்பிள் ஆகியவற்றை சேர்க்கலாம். 

கேரளாவில் உள்ள நிபா வைரஸ் பங்களாதேஷ் மாறுபாடு.. அதிக ஆபத்தானதா? என்ன சிகிச்சை?

பொதுவாக Aedes aegypti என்ற கொசுவின் கடியின் மூலம் டெங்கு வைரஸ் உடலுக்குள் நுழைகிறது. இந்த வைரஸ் முதலில் மோனோசைட்டுகள் மற்றும் மேக்ரோபேஜ்கள் எனப்படும் நோயெதிர்ப்பு செல்களை குறிவைக்கிறது. வைரஸ் பரவும் விதத்தில் பல்வேறு கட்டங்கள் உள்ளன. டெங்கு நோய்த்தொற்றின் ஆரம்ப கட்டம் காய்ச்சல் நிலை என்று அழைக்கப்படுகிறது, இது பொதுவாக சுமார் 2-5 நாட்கள் நீடிக்கும். இந்த கட்டத்தில், வைரஸ் பெருகி உடல் முழுவதும் பரவுகிறது. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து, நோய்த்தொற்று பரவாமல் தற்காத்து கொள்வது நல்லது.

Follow Us:
Download App:
  • android
  • ios