Asianet News TamilAsianet News Tamil

கேரளாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு.. புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அரசு திட்டம்?

கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

COVID Cases Rise in Kerala Again: Restrictions Likely To Be Imposed Rya
Author
First Published Dec 15, 2023, 11:15 AM IST

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் தற்போது சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. கேரளாவில் ஒமிக்ரானின் துணை வகையான JN.1 மாறுபாடு காரணமாக கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் இந்தியாவில் மீண்டும் கோவிட் பற்றிய கவலை மற்றும் அச்சம் எழுந்துள்ளது. எனினும் இதுகுறித்து கவலைப்பட ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளனர், ஆனால் வைரஸ்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள்  வலியுறுத்தியுள்ளனர். கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் கேரள அரசு முக்கியமான பகுதிகளில் கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை விதிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கேரளாவில் திடீரென அதிகரிக்கும் கொரொனா பாதிப்பு

கேரளாவில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. ஒரு மாதத்தில், கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33ல் இருந்து 768 ஆக உயர்ந்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையின் தொற்று நோய்கள் பிரிவின் இணைப் பேராசிரியர் டாக்டர் திபு டி.எஸ். இதுகுறித்து பேசிய போது “ "ஜே.என்.1 உடன் தொடர்புடைய பொதுவான அறிகுறிகளில் காய்ச்சல், இருமல், சோர்வு, மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், வயிற்றுப்போக்கு மற்றும் தலைவலி ஆகியவை அடங்கும். நோயின் தீவிரம் மற்றும் பொது சுகாதார பாதிப்பை மதிப்பிடும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு தேவை" என்று அவர் குறிப்பிட்டார்.

நிலைமையைக் கண்காணிக்க நிபுனர்கள் அறிவுறுத்தல்

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து இந்தியா கவலைப்படத் தேவையில்லை, ஆனால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். விழிப்புணர்வு விஞ்ஞான சமூகத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும், பொது மக்களுக்காக அல்ல" என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG) இன் சமீபத்திய தரவு கேரளாவில் JN.1 மாறுபாடு இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது, இந்த மாறுபாடு காரணமாகவே தற்போது கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. JN.1 என்பது BA.2.86 ஒமிக்ரான் மாறுபாட்டின் துணைப் பரம்பரையாகும். இந்த மாறுபாடு ஆகஸ்ட் மாதம் லக்சம்பேர்க்கில் முதன்முதலில் கண்டறியப்பட்டது.

BA.2.86, "Pirola" மாறுபாடு என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை இது புதியது. இது உலகளவில் 38 நாடுகளில் ஏற்கனவே இந்த பாதிப்பு உறுதியாகி உள்ளது, பெரும்பாலும் இங்கிலாந்து, போர்ச்சுகல், அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் இந்த மாறுபாடு காணப்படுகிறது, இந்த மாறுபாட்டின் தனித்தன்மை என்னவென்றால், மேல் சுவாச வகை சம்பந்தப்பட்ட சில நோய்த்தொற்றுகள் உள்ளன. அதாவது சளி, இருமல், சளி மற்றும் சில நேரங்களில் மூச்சுத் திணறல். ஆனால் இன்று வரை, ஆக்ஸிஜன், ICU படுக்கை, வென்டிலேட்டர் மற்றும் வென்டிலேட்டர் தேவை இல்லை என்றும், கொரோனா தொடர்பான இறப்புகளும் பதிவாகவில்லை எனவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மர்ம நிமோனியா முதல் டெங்கு வரை.. 2023-ல் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்த நோய்கள்..

இந்தியாவில் கோவிட் பாதிப்பு

இந்தியாவில் வியாழக்கிழமை 237 புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், செயலில் உள்ள வழக்குகள் 1,185 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 5,33,309 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் தேசிய மீட்பு விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது என்று சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் (புதன்கிழமை) இந்தியாவில் ஒரே நாளில் 252 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதிக்குப் பிறகு மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios