Asianet News TamilAsianet News Tamil

ஆட்டுக்கறி சாப்பிடுறீங்களா? அப்ப மறக்காம மண்ணீரல் அல்லது  சுவரொட்டி சாப்பிடுங்க.. அவ்ளோ நன்மை இருக்கு இதுல..!!

ஆட்டு கறியில் இருக்கும் மண்ணீரல் சாப்பிடுவதால் கிடைக்கும்  நன்மைகள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

magical benefits of goat spleen for health in tamil mks
Author
First Published Sep 9, 2023, 7:28 PM IST

ஆட்டு கறியில் இருக்கும் மண்ணீரல் "சுவரோட்டி" என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது பச்சையாக இருக்கும் போது ஒட்டும் தன்மையைக் கொண்டது. அதனால் தான் இதனை சுவரோட்டி என்றும் சொல்லுவர். இதில் அமினோ அமிலங்கள், வைட்டமின் பி12 மற்றும் தாதுக்கள் மிகவும் அதிகமாக நிறைந்துள்ளது. குறிப்பாக இதனை  ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு இரும்புச்சத்து கிடைப்பதற்காக இதனை பரிந்துரைப்பர். மேலும் இது ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக இது ரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது. அதுபோல்  சுவரொட்டியில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. எனவே, இரும்புச்சத்து பெற விரும்புவோர் ஆட்டு மண்ணீரல் கண்டிப்பாகசாப்பிடுங்கள். ஏனெனில் இந்த சுவரொட்டி இரும்பு சத்துக்கு சமமாகும். மேலும் இது தென்னிந்தியாவின் பிரபலமான உணவு என்றும் கூறலாம்.

இதையும் படிங்க:  ஒரு மாதம் அசைவ உணவை சாப்பிடவில்லை எனில், உடலில் என்ன நடக்கும்?

ஆட்டு மண்ணீரல் அல்லது சுவரொட்டி நன்மைகள்:
இரத்த சோகை தடுக்க உதவுகிறது: உடலில் இரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்க ஆட்டு மண்ணீரல் மிகவும் உதவுகிறது. ஏனெனில் இதில் அதிக அளவு புரதம் நிறைந்திருக்கிறது. அவை ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கவும், ரத்த சோகை வராமல் தடுக்கவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது: இவற்றை சாப்பிட்டால் கிடைக்கும் மிகவும் முக்கியமான நன்மைகளில் ஒன்று நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு. நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்தால் ஆட்டு மண்ணீரல் சாப்பிடுவது நல்லது. அவை உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவும்.

பெருங்குடல் அழற்சிக்கு உதவுகிறது: ஆட்டு மண்ணீரல் பெருங்குடல் வளர்ச்சிக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. ஒருவேளை உங்களுக்கு பெருங்குடல் அலர்ஜி இருந்தால் நீங்கள் ஆட்டு மண்ணீரலை மாதம் இருமுறை தொடர்ந்து சாப்பிட்ட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டால் விரைவில் குணமாவீர்கள்.

இதையும் படிங்க:  அசைவ உணவுகளால் எலும்பு பாதிக்குமா? நிபுணர்களின் அதிர்ச்சி தகவல்

முடக்கு வாதத்திற்கு உதவுகிறது: நீங்கள் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் ஆட்டு மண்ணீரலை வாரம் ஒரு முறை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் முடக்கு வாதத்தில் இருந்து பூரண விடுதலை கிடைக்கும்.

சிறுநீரக நோய் வராமல் தடுக்க உதவுகிறது: சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆட்டு மண்ணீரல் பெரிதும் உதவும். எனவே  இதனை நீங்கள் மாதம் இருமுறை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக தொற்றிலிருந்து முழுமையாக விடுதலை அடைவீர்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios