Asianet News TamilAsianet News Tamil

2 தக்காளி போதும் டேஸ்டான சாம்பார் ரெடி.. ஒருமுறை செஞ்சு பாருங்க திரும்பத் திரும்ப செய்வீங்க!

Thakkali Sambar Recipe : வீட்டில் சுவையான தக்காளி சாம்பார் செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

easy and tasty tomato sambar recipe in tamil mks
Author
First Published Sep 2, 2024, 1:58 PM IST | Last Updated Sep 2, 2024, 2:03 PM IST

வீட்டில் காய்கறிகள் ஏதும் இல்லையா? ஆனால், சாம்பார் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா? அப்படியானால் உங்களுக்கான பதிவு தான் இது. 

உங்கள் வீட்டில் தக்காளி, வெங்காயம் இருக்கிறதா? அப்படியானல் அதை வைத்து தக்காளி சாம்பார் செய்து சாப்பிடுங்கள். இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். மேலும், இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபமாக இருக்கும். ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ரெசிபி செய்து கொடுங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக, இந்த ரெசிபி பேச்சுலர்களும் செய்தும் சாப்பிடலாம். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில், தக்காளி சாம்பார் செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க:  நாவூறும் சுவையில் மாங்காய் சாம்பார்.. ரெசிபி இதோ..!

தக்காளி சாம்பார் செய்ய தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு - 1/4 கப்
பெரிய தக்காளி - 2 
சின்ன வெங்காயம் - 10
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
சாம்பார் பொடி - 3 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
புளி - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு
நெய் (அ) நல்லெண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  மணக்க மணக்க கல்யாண வீட்டு சாம்பார்.. இனி வீட்டிலும் செய்யலாம்... ரெசிபி இதோ!

செய்முறை :

தக்காளி சாம்பார் செய்ய முதலில், எடுத்து வைத்த புளியை சூடான தண்ணீரில் சுமார் 20 நிமிடம் ஊற வைத்துப் பிறகு அதிலிருந்து சாற்றை பிழிந்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு தக்காளியை கழுவி அதை மிக்ஸி ஜாரில் போட்டு, அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை அடுத்து எடுத்து வைத்த துவரம் பருப்பை நன்கு கழுவி கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் ஒரு குக்கரை வைத்து, அதில் கழுவி வைத்த துவரம் பருப்பு சேர்க்கவும். இதனுடன் அரைத்து வைத்த தக்காளி, சின்ன வெங்காயம், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டு பிறகு குக்கரை மூடி சுமார் 8 விசில் வைத்து இறக்கவும்.

குக்கரில் விசில் போன பிறகு குக்கர் மூடியே திறந்து, மீண்டும் குக்கரை அடுப்பில் வைக்கவும். அடுப்பை குறைவான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கரைத்து வைத்த புளிசாற்றை இதில் ஊற்றி ஒருமுறை கிளறி விடுங்கள். பின் அதில் சாம்பார் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். மீண்டும் இதில் 2 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடுங்கள். சாம்பார் நன்றாக கொதித்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தாளிப்பதற்கு நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பின் தாளித்த இதனை சாம்பாரில் ஊற்றி ஒருமுறை கிளறி விடுங்கள். அவ்வளவுதான் டேஸ்டான தக்காளி சாம்பார் ரெடி.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios