முடி உதிர்தல் பிரச்சனையை போக்க தலைமுடிக்கு எண்ணெய் தேய்க்க சிறந்த வழி எது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

முடி உதிர்தல் என்பது ஆண், பெண் என இருவரையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. மரபியல், மன அழுத்தம், மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு மற்றும் சுற்றுச்சூழல் போன்ற உள்ளிட்ட பல காரணங்கள் முடி உதிர்தலுக்கு பங்களிக்கின்றனர். அதே சமயம் சரியான முடி பராமரிப்பு இல்லையென்றாலும் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும்.

முடி உதிர்தலுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் இயற்கையான தீர்வுகளில் ஒன்று வழக்கமாக எண்ணெய் தேய்ப்பது ஆகும். கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் வலுப்படுத்தும். ஆனாலும் அதிகபட்ச நன்மைகளைப் பெற உங்கள் தலைமுடிக்கு சரியாக எண்ணெய் தேய்ப்பது எப்படி என்று அறிந்து கொள்வது ரொம்பவே முக்கியம். எனவே இந்த பதிவில் நீங்கள் கடும் முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால் உங்களது தலைமுடிக்கு எப்படி எண்ணெய் தேய்ப்பது என்பது குறித்த படிப்படியான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

சிறந்த எண்ணெயை தேர்வு செய்க!

எந்தவொரு முடி பராமரிப்பு வழக்கத்தில் முதல் மற்றும் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் சரியான எண்ணெயை தேர்வு செய்வது தான். ஏனெனில் வெவ்வேறு எண்ணெய்களில் வெவ்வேறு நன்மைகள் உள்ளன. எனவே உங்களது தலைமுடிக்கு ஏற்ற எண்ணெயை தேர்வு செய்வது மிக முக்கியம். இப்போது முடி உதிர்களுக்கு நன்மை கிடைக்கும் சில எண்ணெய்களின் பட்டியல் இங்கே..

1. தேங்காய் எண்ணெய் - ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு இந்த எண்ணெய் சிறந்த தேர்வாகும். முடி உடைவதை தடுக்கவும், வேர்களில் இருந்து முடிய வலுப்படுத்தவும் இந்த எண்ணெய் உதவுகிறது. இந்த எண்ணெயில் உச்சந்தலையை ஊட்டமளிக்கும் மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன.

2. ஆமணக்கு எண்ணெய் - இந்த எண்ணெயில் நிறைந்திருக்கும் ரிசினோலிக் அமிலம் உச்சந்தலையில் இரத்த ஒட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சியை தூண்டும். மேலும் கூந்தல் வறட்சி மற்றும் பொடுகு எதிர்த்து போராடும்.

3. ஆர்கான் எண்ணெய் - ஆர்கான் எண்ணெயில் வைட்டமின் ஈ, அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகமாக உள்ளன அவை முடி உடைவதை குறைத்து உச்சந்தலைக்கு ஊட்டமளித்து வலுவான மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும் முடியின் முனைகளில் பிளவுகள் ஏற்படுவதை குறைக்க உதவும். முடிக்கு பளபளப்பை கொடுக்கும்.

4. பாதாம் எண்ணெய் - வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றின் வளமான உள்ளடக்கத்திற்கு பெயர் பெற்ற பாதாம் எண்ணெயானது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் முடியின் தண்டுகளை வலுப்படுத்தி முடி உடைவதை தடுக்கும்.

5. நெல்லிக்காய் எண்ணெய் - வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த நெல்லிக்காய் எல்லையானது முடி உதிர்தலை குறைத்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சி ஊக்குவிக்கும்.

எண்ணெயை சூடாக்க வேண்டும்:

நீங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பதற்கு முன் முதலில் எண்ணெயை சூடுப்படுத்த வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உச்சந்தலையிலும், முடியிலும் அதன் செயல்திறனை அதிகரிக்க உதவும். எண்ணெயை சூடாக்குவதற்கு முதலில் ஒரு கிண்ணத்தில் எண்ணெயை ஊற்றி அதை 10 முதல் 15 வினாடிகள் மிதமாக சூடாக்க வேண்டும். எண்ணெய் அதிகமாக சூடாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுபோல மிதமான சூட்டில் இருக்கும்போதே எண்ணெயை உச்சந்தலையில் தேய்க்க வேண்டும். அதிக சூட்டில் தேய்த்தால் உச்சந்தலையில் காயங்களை ஏற்படுத்தும்.

தலைமுடிக்கு எப்படி எண்ணெய் தேய்க்க வேண்டும்?

- முதலில் உங்களது தலைமுடியை இரண்டு பகுதிகளாக பிரித்து விரல் நுனிகள் அல்லது பருத்தி உருண்டையை பயன்படுத்தி எண்ணெயை உங்களது உச்சந்தலையில் மெதுவாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகரித்து முடியின் நுண்குழாய்களை தூண்டி, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். உங்களது உச்சந்தலையை சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி நீங்கள் செய்வது மூலம் எண்ணெய் உறிஞ்சுவது மட்டுமல்லாமல் உங்களை தளர்வுறச் செய்து மன அழுத்தத்தையும் குறைக்கும்.

- உச்சந்தலையில் மசாஜ் செய்த பிறகு முடியின் வேர்கள் முதல் நுனி வரை தலைமுடி முழுவதும் எண்ணெய் தேய்க்க வேண்டும். இப்படி தைப்பதன் மூலம் முழு முடி தண்டுக்கும் ஈரப்பதம் அளித்து ஊக்களிக்கும். இதனால் முடி உடைதல், முடியின் முனையில் பிளவுகள் ஏற்படும் அபாயங்கள் குறையும். உங்களது தலைமுடிக்கு அதிகமாக எண்ணெய் தேய்க்காமல் போதுமான அளவு தேய்ப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில் பொடுகு போன்ற உச்சந்தலை பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இந்த தவறை செய்யாதீங்க!!

எண்ணெய் தேய்த்தே பிறகு உடனே குளிக்கவோ அல்லது முடியை கட்டவோ. அது முடி உதிர்தல் ஏற்படும். கூடாது சுமார் 1 முதல் 2 அப்படியே வைத்து விடுங்கள். முடிக்கு அதிக ஊட்டச்சத்து கிடைக்க இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட்டால் நல்லது. ஒருவேளை நீங்கள் இரவில் எண்ணெய் தேய்த்த பிறகு அப்படியே விட்டுவிட விரும்பினால் தலைமுடிக்கு ஷவர் கேப் அல்லது மென்மையான துணியால் மூட வேண்டும். இதனால் தலையணை உறை பாதுகாக்கப்படும்.

தலைமுடிக்கு ஷாம்பு போடுதல் :

எண்ணெய் தேய்த்த பிறகு சிறிது நேரம் கழித்து சூடான நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். ஏனெனில் சூடான நீரானது உச்சந்தலையையும், முடியையும் உலர்த்தும். ஆனால் தலைமுடிக்கு லேசான, சல்பேட் இல்லாத ஷாம்புவை தான் பயன்படுத்த வேண்டும். அதிகமாக ஷாம்பு பயன்படுத்த வேண்டாம் ஷாம்பு போட்ட பிறகு கண்டிஷனர் பயன்படுத்தும் மறக்காதீர்கள். குறிப்பாக உங்களது முடி வறண்டு போயிருந்தாலும் அல்லது முடியின் முனைகளில் பிளவுகள் ஏற்பட்டாலோ கண்டிஷனர் பயன்படுத்துவதன் மூலம் அது ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள உதவும் மற்றும் முடி உடையாமல் பாதுகாக்கும்.

ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு இவற்றையும் பின்பற்றுங்கள் :

- முடி ஆரோக்கியமாக வளர உங்களது தலைமுடிக்கு தவறாமல் எண்ணெய் தேய்க்க வேண்டும். குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையை அல்லது தேவைப்பட்டால் அடிக்கடி கூட தேய்க்கலாம். வழக்கமாக எண்ணெய் தேய்ப்பது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், மயிர்கால்களை வளர்க்கும் பிறகு காலப்போக்கில் வலுவான மற்றும் அடர்த்தியாக முடி வளர உதவும்.

- முடி உதிர்தலை குறைக்க எண்ணெய் தேய்ப்பது ஒரு சிறந்த வழியாக இருந்தாலும் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு பங்களிக்க பிற காரணங்களும் உள்ளன அதாவது முடி உதிர்தலை தடுக்க வைட்டமின்கள் புரதங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சமச்சீர் உணவு சாப்பிடுவது மிகவும் அவசியம். உதரணமாக இரும்பு துத்தனாக போன்ற தாதுக்கள் இருந்த உணவுகளும் வைட்டமின் ஏ பி சி டி இ போன்றவை போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இவை எல்லாவற்றையும் விட ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நீரேற்றம் ரொம்பவே முக்கியம். எனவே தினமும் நிறைய தண்ணீர் குடியுங்கள்.

- கூடுதலாக வழக்கமான உடற்பயிற்சி, போதுமான தூக்கம் மற்றும் மன அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கத்தை பின்பற்றுங்கள். இது முடியின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நல் வாழ்வையும் மேம்படுத்தும்.