MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • குண்டுமழை பொழிந்த இஸ்ரேல்... காசா மருத்துவமனை தாக்குதலில் 15 பேர் பலி!

குண்டுமழை பொழிந்த இஸ்ரேல்... காசா மருத்துவமனை தாக்குதலில் 15 பேர் பலி!

காசாவில் உள்ள நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மூன்று பத்திரிகையாளர்களும் அடங்குவர். இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் சர்வதேச அமைப்புகளின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளன.

1 Min read
SG Balan
Published : Aug 25 2025, 06:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்
Image Credit : X

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்

காசாவில் உள்ள நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், மூன்று பத்திரிகையாளர்கள் உட்பட குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் உயிரிழந்த பத்திரிகையாளர்களில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒப்பந்த புகைப்படக் கலைஞர் ஹாதம் காலித் என்பவரும் அடங்குவதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த வாரம், காசா நகரத்தைக் கைப்பற்றுவதற்காக இஸ்ரேலிய இராணுவம் பெருமளவிலான இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியது.

24
இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள்
Image Credit : Asianet News

இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள்

ஹமாஸ் குழு அக்டோபர் 2023-இல் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹமாஸ் தளங்களை முற்றிலுமாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தீவிரப்படுத்தியுள்ளார். இதில் ஆயிரக்கணக்கான வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த இராணுவ நடவடிக்கைகள் சர்வதேச அமைப்புகளின் வேண்டுகோள்களை மீறி மேற்கொள்ளப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தத் தாக்குதல்கள் மனிதாபிமான நெருக்கடியை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Related Articles

Related image1
Now Playing
உணவுக்காக வந்தார்கள் பட்டினியால் பலியாகும் உயிர்கள்! காசா குறித்த ஐநா வார்னிங்?
Related image2
அட கொடுமையே! இஸ்ரேல் தாக்குதலில் பிரபல கால்பந்து வீரர் பலி! உணவுக்காக காத்திருந்தபோது சோகம்!
34
ஹமாஸ் குற்றச்சாட்டுகள்
Image Credit : Getty

ஹமாஸ் குற்றச்சாட்டுகள்

போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை நெதன்யாகு முடக்குவதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. காசா நகரில் அப்பாவி பொதுமக்கள் மீது இஸ்ரேல் "கொடூரமான போரை" நடத்துவதாக ஹமாஸ் தனது டெலிகிராம் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதே சமயம், இஸ்ரேலின் இந்த கடுமையான அணுகுமுறைக்கு அதன் கூட்டாளிகள் மற்றும் எதிரிகளிடமிருந்து கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. போர் நிறுத்தம் மற்றும் சண்டை நிறுத்தத்திற்கு சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணி உறுப்பினர்களின் உள்நாட்டு அழுத்தம் காரணமாக, அவர் தனது இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்கிறார்.

44
சர்வதேச அமைப்புகள் கண்டனம்
Image Credit : Getty

சர்வதேச அமைப்புகள் கண்டனம்

காசா மேற்குக் கரையில் யூத குடியிருப்புகளை விரிவுபடுத்தும் திட்டத்தை இஸ்ரேல் இறுதி செய்துள்ளதற்கு சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பாதகமானது என பல சர்வதேச பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
காசா
உலகம்
இசுரேல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved