MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Siragadikka Aasai : சிந்தாமணியின் முகத்திரையை கிழித்த பைனான்சியர்.... முத்துவின் பிளான் சக்சஸ்

Siragadikka Aasai : சிந்தாமணியின் முகத்திரையை கிழித்த பைனான்சியர்.... முத்துவின் பிளான் சக்சஸ்

Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து வருமானவரித்துறை அதிகாரியை அழைத்து சென்று பைனான்சியரை சந்தித்து பேசி இருக்கிறார். அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 18 2026, 08:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவும் மீனாவும் வீட்டை மீட்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபுறம் மனோஜ் எந்த வித கவலையும் இன்றி ரோகிணியுடன் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் காட்டி வருகிறார். ரோகிணியும், மனோஜும் ஷோரூமில் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்ததை பார்த்த வக்கீல், விஜயாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லிவிடுகிறார். இதனால் கடும் கோபம் அடையும் விஜயா, நேரடியாக மனோஜை ஷோரூமில் பார்க்க கிளம்புகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai : பைனான்சியருக்கு ஆப்பு... வீட்டை மீட்க முத்துவுக்கு கிடைத்த புது ரூட்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
வசமா சிக்கிய மனோஜ்
Image Credit : jiohotstar

வசமா சிக்கிய மனோஜ்

மனோஜின் ஷோரூமிற்கு செல்லும் விஜயா, ரோகிணி எப்போ இங்க வந்தா என கேட்க, மனோஜ் ஷாக் ஆகிறார். பின்னர் அவ எதுக்கு இங்க வந்தா என விஜயா துருவி துருவி கேட்க, அருகில் இருந்த சந்தோஷ், அவ எலி பிடிக்க இங்க வந்தா என கூறி மழுப்புகிறார். எலி பிடிப்பதற்காக அவ பூனை வாங்கி வந்ததாகவும், ஆனால் அந்த பூனை தற்போது எலி உடன் ஃபிரெண்டாகிவிட்டது என்றும் கூறுகிறார். அதன்பின்னர் அந்த பூனையை எடுத்து வர சொல்லும் விஜயா, அவ கொண்டுவந்த எந்த பொருளும் இங்க இருக்க கூடாது. உடனே அதை வெளியே கொண்டு போ என சொல்கிறார்.

Related Articles

Related image1
Siragadikka Aasai : பைனான்சியருக்கு ஆப்பு... வீட்டை மீட்க முத்துவுக்கு கிடைத்த புது ரூட்
Related image2
Siragadikka Aasai : மனோஜுக்கு வில்லியாக மாறிய விஜயா... வக்கீல் பார்த்த கோல்மால் வேலை
36
விஜயாவின் பலே பிளான்
Image Credit : jiohotstar

விஜயாவின் பலே பிளான்

அதுமட்டுமின்றி இனிமே ரோகிணி இங்கு வருகிறாளா என்பதை தான் எப்படி கண்காணிப்பது என விஜயா கேட்க, அதற்கு ஜீவா, இங்கு சிசிடிவி இருக்கு, அதை உங்க போன் உடன் கனெக்ட் செய்தால், எங்கிருந்து வேண்டுமானாலும் நீங்க இங்க என்ன நடக்குதுனு பார்க்கலாம் என கூறுகிறார். அதற்கு விஜயா உடனே எனக்கு அந்த கனெக்‌ஷன் வேண்டும் என கூறுகிறார். அதுமட்டுமின்றி இனி அந்த ரோகிணி கூட நீ பேசவே கூடாது என மனோஜுக்கும் கண்டிஷன் போடுகிறார் விஜயா.

46
வருமான வரித்துறை அதிகாரி உடன் செல்லும் முத்து
Image Credit : jiohotstar

வருமான வரித்துறை அதிகாரி உடன் செல்லும் முத்து

மறுபுறம் முத்துவும், மீனாவும், தங்கள் நண்பரான வருமான வரித்துறை அதிகாரியை அழைத்துக் கொண்டு பைனான்சியரை பார்க்க செல்கிறார்கள். அங்கு சென்று கேட்கும் போது அவரை பார்க்க 3 மணி நேரம் காத்திருக்க வேண்டி இருக்கும் என ஊழியர் ஒருவர் சொல்ல, முத்து அழைத்து வந்த வருமான வரித்துறை அதிகாரி தான் யார் என்பதை சொன்னதும், உடனே பைனான்சியரை அங்கு வர வைக்கிறார் அந்த ஊழியர். அப்போது உள்ளே வாங்க சார், என பைனான்சியர் அந்த அதிகாரியை அழைத்து செல்கிறார். முத்துவும் மீனாவும் உடன் செல்கிறார்கள்.

56
பைனான்சியர் உடைத்த உண்மை
Image Credit : jiohotstar

பைனான்சியர் உடைத்த உண்மை

உள்ளே சென்றதும் நீங்க இவங்க வீட்டை திருப்ப அவகாசம் கொடுக்காமல் உடனே நோட்டீஸ் அனுப்பி ஏன் ஜப்தி பண்ணுனீங்க என கேட்கிறார். அதற்கு பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்த பைனான்சியரிடம், நீங்க பதில் சொல்லலேனா நான் என்னுடைய டீம் உடன் வந்து உங்க ஆபிஸில் ஐடி ரெய்டு நடத்துவேன் என மிரட்டியதும் வேறுவழியின்றி எல்லா உண்மையையும் சொல்லிவிடுகிறார். இவங்களுக்கு நான் பணம் கொடுக்கல, என்னை பணம் கொடுக்க வைத்தது சிந்தாமணி தான் என்கிற உண்மையை உடைக்கிறார்.

66
மிரட்டலுக்கு பயப்படாத சிந்தாமணி
Image Credit : jiohotstar

மிரட்டலுக்கு பயப்படாத சிந்தாமணி

அவங்க எதுக்காக உங்க மூலமா பணம் கொடுத்தாங்க என அவர் கேட்க, விஜயா அவங்களுடைய பிரெண்ட் அதனால் பணத்தை அவங்களே கொடுத்தால் திருப்பி வாங்க முடியாது என்பதால் என் மூலம் கொடுத்தார்கள். பின்னர் சிந்தாமணிக்கு போன் பண்ணி பேச சொல்கிறார் அந்த வருமான வரித்துறை அதிகாரி, அப்போது போனில் திமிராக பேசும் சிந்தாமணி, யார் வேண்டுமானாலும் வரட்டும் நான் எல்லா டாக்குமெண்ட்டும் பக்காவா வச்சிருக்கேன். எனக்கு அந்த பணம் வந்தால் தான் நான் சீல் எடுக்க சம்மதிப்பேன் என கூறிவிடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்தது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image2
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Recommended image3
Ethirneechal Thodargiradhu : குணசேகரனுக்கு செக் வைத்த நீதிமன்றம்... ஈஸ்வரிக்கு காத்திருக்கும் சவால்..!
Related Stories
Recommended image1
Siragadikka Aasai : பைனான்சியருக்கு ஆப்பு... வீட்டை மீட்க முத்துவுக்கு கிடைத்த புது ரூட்
Recommended image2
Siragadikka Aasai : மனோஜுக்கு வில்லியாக மாறிய விஜயா... வக்கீல் பார்த்த கோல்மால் வேலை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved