- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Karthigai Deepam : ரேவதியை தடுத்து நிறுத்திய கார்த்திக்... கிழிக்கப்பட்ட டாக்குமென்ட்! கார்த்திகை தீபத்தில் பரபரப்பு
Karthigai Deepam : ரேவதியை தடுத்து நிறுத்திய கார்த்திக்... கிழிக்கப்பட்ட டாக்குமென்ட்! கார்த்திகை தீபத்தில் பரபரப்பு
Karthigai Deepam Serial Twist : கார்த்திகை தீபம் சீரியலில் ரேவதி டாக்குமென்டில் கையெழுத்து போட இருந்த நிலையில், அவரை தடுத்து நிறுத்திய கார்த்தி அந்த பேப்பரை கிழித்துள்ளார்.

கார்த்திகை தீபம் சீரியல் ட்விஸ்ட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் கார்த்திகை தீபம். விறுவிறுப்பான திருப்பங்களுடன் நகர்ந்து வரும் இந்த சீரியலில், ரேவதி எடுக்கப்போகும் ஒரு முக்கிய முடிவை கார்த்திக் தடுத்து நிறுத்தும் பரபரப்பான சம்பவம் இன்று அரங்கேற உள்ளது. நேற்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி சொல்வதை ஏற்றுக்கொண்டு ரேவதி முக்கியமான ஆவணத்தில் கையெழுத்திட தயாராகிறார்.
கையெழுத்து போட மறுக்கும் ராஜராஜன்
இதையடுத்து வீட்டில் உள்ள அனைவரிடமும் கையெழுத்து வாங்கும் முயற்சியில் சாமுண்டீஸ்வரி இறங்குகிறார். முதலில் ராஜராஜனிடம் கையெழுத்து போடுமாறு சாமுண்டீஸ்வரி கூற, அதற்கு அவர் கடும் கோபத்துடன் மறுப்பு தெரிவிக்கிறார். ஆனால் ரேவதி அவரை சமாதானப்படுத்தி, இறுதியில் கையெழுத்திட சம்மதிக்க வைக்கிறார். தொடர்ந்து ஒவ்வொருவராக கையெழுத்திடும் நிலையில், கடைசியாக ரேவதியின் கையெழுத்து மட்டும் மீதமாகிறது.
உண்மையை அறியும் கார்த்திக்!
இதற்கிடையே வீட்டிற்கு வரும் கார்த்திக், ரேவதி அங்கு இல்லாததை கவனிக்கிறார். இதுகுறித்து பாட்டியிடம் விசாரிக்க, நடந்த விஷயங்கள் அனைத்தும் அவருக்கு தெரிய வருகிறது. ரேவதி அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டால் இரண்டு குடும்பங்களையும் ஒன்றிணைக்கும் தனது முயற்சி பாதிக்கப்படும் என்பதை உணரும் கார்த்திக், உடனடியாக சாமுண்டீஸ்வரி வீட்டை நோக்கி விரைகிறார்.
ரேவதியின் கையெழுத்தை தடுத்து நிறுத்திய கார்த்திக்!
ரேவதி கையெழுத்திட தயாராகும் நேரத்தில் சரியாக அங்கு வந்து சேரும் கார்த்திக், அவரை தடுத்து நிறுத்துகிறார். மேலும், கையில் இருந்த ஆவணத்தை கிழித்துப் போட்டுவிட்டு, “என்ன பண்ணிட்டு இருக்க?” என்று ரேவதியிடம் கடுமையாக கேட்கிறார். தொடர்ந்து ரேவதியை தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் கார்த்திக், “இந்த இரண்டு குடும்பங்களையும் சேர்க்கணும்னு தான் நான் வந்திருக்கேன். நீ இப்படி கையெழுத்து போட்டு கொடுத்துட்டா, எந்த காலத்திலும் இந்த குடும்பங்கள் ஒன்று சேராது” என்று தனது வேதனையை வெளிப்படுத்துகிறார்.
அடுத்தடுத்து காத்திருக்கும் ட்விஸ்ட்
இதனால் சாமுண்டீஸ்வரியின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும்? ரேவதி கார்த்திக்கின் பேச்சை கேட்டு அவருடன் செல்வாரா? இரண்டு குடும்பங்களையும் ஒன்றிணைக்க கார்த்திக் எடுக்கப்போகும் அடுத்த முயற்சி என்ன? இனி வரும் காட்சிகளில் பரபரப்பான திருப்பங்கள் காத்திருக்கின்றன. இன்றைய கார்த்திகை தீபம் எபிசோடை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்!

