MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Ethirneechal : இராவணனை நம்பி முட்டாள்தனமான முடிவெடுக்கும் ஆதி குணசேகரன்; காத்திருக்கும் செம ட்விஸ்ட்

Ethirneechal : இராவணனை நம்பி முட்டாள்தனமான முடிவெடுக்கும் ஆதி குணசேகரன்; காத்திருக்கும் செம ட்விஸ்ட்

Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இராவணன், ஆதி குணசேகரன் வீட்டுக்கே வந்து அவரின் நன்மதிப்பை பெற்றிருக்கிறார். இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 12 2026, 09:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினியை கண்டுபிடிக்க ஒருபுறம் ஜனனி அலையும் நிலையில், மறுபுறம் இராவணன், ஆதி குணசேகரனின் வீட்டுக்கே வந்து அவருடன் அமர்ந்து பேசியதோடு, தர்ஷினியை நானே காப்பாற்றுகிறேன் என உறுதியளித்துள்ளார். ஆதி குணசேகரனும் அந்த இராவணனை மலைபோல் நம்ப ஆரம்பித்துள்ளார். அவருக்கு தன் வீட்டிலேயே தடபுடலாக விருந்தும் வைத்திருக்கிறார். ஆனால் ஆதி குணசேகரன் வீட்டில் சாப்பிட மறுக்கும் இராவணன், இங்கு சாப்பிட்டால் மொத்தமாக உங்க குடும்பத்துக்கு அடிமையாகிவிடுவேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai : டைவர்ஸ் விவகாரம்... ரோகிணி எடுத்த தடாலடி முடிவு; மனோஜுக்கு காத்திருக்கும் சிக்கல்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சோர்ந்துபோன ஜனனி
Image Credit : youtube/suntv

சோர்ந்துபோன ஜனனி

தர்ஷினியை தேடி அலைந்து டயர்டு ஆகும் ஜனனி, சோர்ந்துபோய் நின்றபடி அருந்ததியிடம் பேசுகிறார். எல்லா இடத்துலயும் தேடிட்டோம். நம்மளால ஏன் இதுக்கு மேல கண்டுபிடிக்க முடியல, இனி என்ன பண்ணனும் ஒவ்வொரு வீடு வீடா ஏறி தேடணுமா, அப்பதான் கண்டுபிடிக்க முடியும் போல என சொல்ல, அது அவ்வளவு ஈஸி கிடையாது ஜனனி என சொல்லும் அருந்ததி, இங்க நல்லவங்க எவ்வளவு இருக்காங்களோ, அதைவிட நிறைய கெட்டவங்களும், அவங்களுக்கெல்லாம் உதவி பண்றவங்களும் இருக்காங்க. அதனால டக்குனு உள்ள போய் விசாரிச்சிட முடியாது என கூறுகிறார்.

Related Articles

Related image1
Ethirneechal : ஆதி குணசேகரனுடன் கூட்டு சேரும் இராவணன்... ஜனனிக்கு செம ஷாக் வெயிட்டிங்
Related image2
Ethirneechal : தர்ஷினியை மீட்க களத்தில் குதிக்கும் இராவணன்... ஜஸ்ட் மிஸ்ஸில் தவறவிட்ட ஜனனி..!
35
அருந்ததி கொடுத்த ஐடியா
Image Credit : youtube/suntv

அருந்ததி கொடுத்த ஐடியா

இதையடுத்து பேசும் ஜனனி, அப்படினா நீங்க பார்த்த ஆளு இங்க தான இருக்கான், இந்த ஏரியால தான இருக்கான். நாம நெருங்கிட்டோம்ல என ஜனனி கேட்க, அதற்கு அருந்ததி, ஆமா நெருங்கிட்டோம், ஆனால் இதுக்குமேல ஒரு அடி எடுத்து வைக்குறதும் ரிஸ்க். கொஞ்ச நேரம் அமைதியா இருப்போம். எப்படியும் கொஞ்ச நேரத்துல இருட்டிடும், அதுக்கப்புறம் பார்த்துக்கலாம் என கூறுகிறார். நம்மளால அவங்கள சமாளிக்க முடியுமா அருந்ததி என ஜனனி கேட்க, அதற்கு அவர் முடியணும், நாம சுயநினைவோட இருக்கோம். அவனுங்க போதையில இருக்கானுங்க. அதனால நான் முன்னால போறேன், நீங்க பின்னால வாங்க என சொல்லிவிட்டு கிளம்புகிறார் அருந்ததி.

45
இராவணனை மலைபோல் நம்பும் குணசேகரன்
Image Credit : youtube/suntv

இராவணனை மலைபோல் நம்பும் குணசேகரன்

மறுபுறம் இராவணனை வீட்டு வாசலில் வந்து வழியனுப்பும் ஆதி குணசேகரன், நான் உங்களை என் இரத்தமா நினைக்குறேன் என சொல்ல, அதற்கு இராவணனும், அப்படி தான் சார் நானும் நினைக்குறேன். நானும் உங்க இரத்தம் தான் என சொல்ல, அதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் கதிர், என்ன அண்ணன் இவன் மேல இம்புட்டு பாசம் காட்டுறாரு என பொறாமைப்படுகிறார். இதையடுத்து தன் தம்பிகளை மாடிக்கு அழைத்து சென்று பேசுகிறார் ஆதி குணசேகரன். அப்போது தர்ஷினியை எப்படி மீட்கலாம் என இருவரிடமும் ஆலோசிக்கிறார்.

55
குணசேகரனை எச்சரிக்கும் கதிர்
Image Credit : youtube/suntv

குணசேகரனை எச்சரிக்கும் கதிர்

ஏற்கனவே வழக்கு விசாரணைக்கு வருவதால் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என ஆதி குணசேகரனிடம் அறிவுறுத்தி இருந்தார் வக்கீல். ஆனால் தற்போது இராவணன் பேச்சைக் கேட்டு ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்திருக்கிறார் ஆதி குணசேகரன். தப்பு பண்றீங்க அண்ணேன் என கதிர் எதிர்த்தாலும், தனக்கு இது சரியாக படுகிறது என கூறிவிடுகிறார் குணசேகரன். இதனால் இனி கதிரே ஆதி குணசேகரனை எதிர்க்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : டைவர்ஸ் விவகாரம்... ரோகிணி எடுத்த தடாலடி முடிவு; மனோஜுக்கு காத்திருக்கும் சிக்கல்
Recommended image2
Serial : சன் டிவி, விஜய் டிவியில் அடுத்தடுத்து முடிவுக்கு வரும் 3 சூப்பர் ஹிட் சீரியல்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி
Recommended image3
Ethirneechal : தர்ஷினியை மீட்க களத்தில் குதிக்கும் இராவணன்... ஜஸ்ட் மிஸ்ஸில் தவறவிட்ட ஜனனி..!
Related Stories
Recommended image1
Ethirneechal : ஆதி குணசேகரனுடன் கூட்டு சேரும் இராவணன்... ஜனனிக்கு செம ஷாக் வெயிட்டிங்
Recommended image2
Ethirneechal : தர்ஷினியை மீட்க களத்தில் குதிக்கும் இராவணன்... ஜஸ்ட் மிஸ்ஸில் தவறவிட்ட ஜனனி..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved