MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • பரணியை மிரட்டிய பாண்டியம்மா... வேல் எடுத்து குத்த வந்த ஷண்முகம் - அடுத்தடுத்த டுவிஸ்ட் உடன் அண்ணா சீரியல்

பரணியை மிரட்டிய பாண்டியம்மா... வேல் எடுத்து குத்த வந்த ஷண்முகம் - அடுத்தடுத்த டுவிஸ்ட் உடன் அண்ணா சீரியல்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பாண்டியம்மா செம மாஸாக என்ட்ரி கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Ganesh A
Published : Jan 09 2024, 02:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Anna Serial

Anna Serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியல் இன் நேற்றைய எபிசோடில் பாண்டியம்மா செம மாஸாக என்ட்ரி கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது முத்துப்பாண்டியிடம் ஜெயில் செல்லை திறந்து விட சொல்ல வெளியே வரும் சௌந்தரபாண்டி அக்காவை பார்த்து பாசத்தை கொட்டுகிறார். 

24
Zee Tamil Anna Serial

Zee Tamil Anna Serial

என்னுடைய இந்த நிலைமைக்கு அந்த சண்முகம் தான் காரணம் என்று சொல்ல பாண்டியம்மா இப்ப நான் உனக்கு மூணு வாக்கு தரேன். ஒன்னு அந்த சண்முகம் தர்மகர்த்தா ஆக மாட்டான். அடுத்து பரணி கையால் அவன் கட்டிய தாலியை கழட்டி எறிஞ்சிட்டு உன் வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன். மூணாவது ரத்னாவுக்கும் முத்துப்பாண்டிக்கும் கல்யாணம் நடக்கும் என்று கூறுகிறார். பிறகு பாண்டியம்மா அங்கிருந்து கிளம்ப சௌந்தரபாண்டி நானும் வரட்டா என்று கேட்க உன்னையும் கூட்டிட்டு போனா உன்னோட நானும் கலி திண்ண வேண்டியது தான் என்று சொல்கிறார். 

இதையும் படியுங்கள்... ஹனுமன் பட டிக்கெட்டுகள் ஒவ்வொன்றில் இருந்தும் ராமர் கோவிலுக்கு ரூ.5 நன்கொடையாக வழங்குவோம் - படக்குழு அறிவிப்பு

34
Anna Serial Update

Anna Serial Update

நேராக சண்முகம் வீட்டுக்கு வரும் பாண்டியம்மா பரணியிடம் அவன் கட்டிய தாலியை கழட்டி எறிஞ்சிட்டு வா என்று கூப்பிட இன்னும் 32 நாள்ல வந்துடுவேன் என்று சொல்கிறாள். இன்னும் 32 நாள்ல நீ வரவில்லை என்றால் தாலி அறுத்து பூவை எடுத்து மொட்டை அழிச்சு கூட்டிட்டுப் போவேன் பாரு, என்ன புரியலையா உன் புருஷன் உயிரோடு இருக்க மாட்டான் என்று மிரட்ட சண்முகம் வேல் எடுத்து குத்த வருகிறான். ஆனால் பாண்டியம்மா கொஞ்சம் அசராமல் குத்துடா பார்க்கலாம் என்று பேச சண்முகம் திகைத்து நிற்கிறான். அடுத்து பாண்டியம்மா வீட்டுக்கு வர அதை பார்த்து பாக்கியம் பதறுகிறாள். சிவபாலனும் மிரண்டு போய் நிற்கிறான். 

44
Anna Serial Today Episode

Anna Serial Today Episode

அடுத்து பாண்டியம்மாவுக்காக முருங்கைக்காய் சாம்பார் எடுத்து வர அதை தூக்கி வீசும் பாண்டியம்மா போய் நாட்டுக்கோழி அடிச்சு குழம்பு வச்சிட்டு வா என்று துரத்தி விடுகிறார். பிறகு நாட்டுக்கோழி குழம்பு வைத்து எடுத்து வந்து கொடுக்க அதை சாப்பிட்டுவிட்டு நான் என்ன குழந்தையா காரை எவ்வளவு கம்மியா இருக்கு என திட்டுகிறார். அடுத்ததாக மூன்று வக்கீல்கள் வீட்டிற்கு வருகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... Sun Tv Serial: முடிவுக்கு வரும் சன் டிவியின் சூப்பர் ஹிட் தொடர்! 'அருவி' சீரியலில் ஏற்படும் முக்கிய மாற்றம்?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அண்ணா (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved