MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • School Reopen: மழை பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பது எப்போது? வெளியான முக்கிய தகவல்!

School Reopen: மழை பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பது எப்போது? வெளியான முக்கிய தகவல்!

School Reopen: ஃபெங்கல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

1 Min read
vinoth kumar
Published : Dec 03 2024, 05:13 PM IST| Updated : Dec 03 2024, 05:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Cyclone Fengal

Cyclone Fengal

 ஃபெங்கல் புயல் காரணமாக தமிழக அரசு சென்னையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் போக்கு காட்டி வந்த புயல் மரக்காணம்- மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. சென்னையில் மழை குறைந்த நிலையில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றது. இதனால், கடந்த சில நாட்களாக மழையால் பாதிக்கப்பட்ட மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

25
School Holiday

School Holiday

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில்  உள்ள தடாகம் உள்ளிட்ட இன்னும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. இதனால் பள்ளிகள் எப்போது திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: Tamilnadu Weather: என்னது! மீண்டும் மிரட்டப்போகிறதா கனமழை? வானிலை மையம் சொன்ன அதிர்ச்சி தகவல்!

35
Anbil Mahesh

Anbil Mahesh

இதுதொடர்பாக தமிழக அரசு  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள 12 மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பள்ளிகளின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

45
Tamilnadu Rain

Tamilnadu Rain

இன்று பிற்பகல் 3 மணியளவில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பள்ளிகளின்  தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

இதையும் படிங்க:  எமன் ரூபத்தில் வந்த அரசு பேருந்து! மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 5 பேர் உடல் நசுங்கி பலி! நடந்தது என்ன?

55
School Reopen

School Reopen

இந்த ஆலோசனைக்கு பிறகு பள்ளிகள் நாளை திறக்கப்படுமா? இல்லை பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா? என்பது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கனமழை
பள்ளி மாணவர்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved