MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • எமன் ரூபத்தில் வந்த அரசு பேருந்து! மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 5 பேர் உடல் நசுங்கி பலி! நடந்தது என்ன?

எமன் ரூபத்தில் வந்த அரசு பேருந்து! மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 5 பேர் உடல் நசுங்கி பலி! நடந்தது என்ன?

கேரளாவில் அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 5 மருத்துவ மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணம் செய்த 7 பேரில் 2 பேர் படுகாயமடைந்தனர். மழை மற்றும் வேகமாக காரை இயக்கியதே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர்.

1 Min read
vinoth kumar
Published : Dec 03 2024, 12:48 PM IST| Updated : Dec 03 2024, 02:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
kerala Accident

kerala Accident

கேரள மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் பயிலும் மாணவர்கள் 7 பேர் காரில் கொச்சி சென்றுகொண்டிருந்தனர். ஆலப்புழா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது கல்லர்கோட் அருகே சென்றபோது, எதிரே வந்த போது கேரள அரசு பேருந்து மீது கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத கார் மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது. 

24
KSRTC

KSRTC

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் கூச்சலிட்ட படியே உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

34
Medical Students

Medical Students

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மற்றும் போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்தனர். 

44
Police investigation

Police investigation

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மழை பெய்துகொண்டிருந்தபோது காரை வேகமாக இயக்கியதும், மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியது தெரியவந்தது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved