- Home
- Tamil Nadu News
- விவாகரத்து மனு... விஜய் மனைவி சங்கீதா தான் கசியவிட்டாரா? உண்மையை போட்டுடைத்த நீதிமன்றம்..!
விவாகரத்து மனு... விஜய் மனைவி சங்கீதா தான் கசியவிட்டாரா? உண்மையை போட்டுடைத்த நீதிமன்றம்..!
vijay: கடந்த 8ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் ஆதித்யா சோழன் தாக்கல் செய்த ஆர்.டிஐ மனுவிற்கு செங்கல்பட்டு மாவட்டம் முதன்மை நீதிபதி சந்திரசேகரன் பதிலளித்துள்ளார்.

விஜய் மனைவி சங்கீதா
தவெக தலைவர் விஜய் வருகையால் முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழக அரசியல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வழங்கக் கோரி அவரது மனைவி சங்கீதா பிப்ரவரி 27ம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நடிகையுடன் திருமணத்தைமீறிய உறவு
அதில், விஜய்க்கும் ஒரு நடிகைக்கும் தொடர்பு இருப்பதாகவும், அந்த நடிகையுடன் அவர் வெளிநாடுகளில் சுற்றியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் அந்த நடிகையுடன் தொடர்பில் இருப்பது தனக்கும், தனது குழந்தைகளுக்கும் அவமானமாக இருப்பதாகவும், எவ்வளவோ சொல்லியும் திருமணத்துக்கு மீறிய உறவை விஜய் கைவிடவில்லை. அந்த நடிகை ஒருவர் எங்களது வாழ்க்கையில் குறுக்கே வந்த பிறகுதான் எங்களது குடும்ப வாழ்க்கையில் பல விதமான பிரச்சனைகள் ஏற்பட்டதால், லண்டன் சென்றுவிட்டேன் என தெரிவித்திருந்தார். இதுதொடர்பான வழக்கு ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
ஆர்டிஐ மனு
இந்நிலையில் ரகசியமாக வைக்க வேண்டிய இந்த விவகாரம் பொதுவெளியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது சட்டப்படி குடும்பநல நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் பாதுகாப்பாக மறைக்கப்பட்டு இருக்கும் நிலையில் பொதுவெளியில் கசிந்தது எப்படி என்ற விவாதம் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 8ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் ஆதித்யா சோழன் தாக்கல் செய்த ஆர்டிஐ மனுவிற்கு செங்கல்பட்டு மாவட்டம் முதன்மை நீதிபதி சந்திரசேகரன் பதிலளித்துள்ளார்.
உண்மையை போட்டுடைத்த நீதிமன்றம்
அதில், மனு பொதுவெளியில் கசிந்தது தொடர்பாக நீதிமன்றம் தானாக முன்வந்து எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. மனு நீதிமன்ற வளாகத்தில் இருந்து கசிந்து இருந்தால் மனுவில் நீதிமன்ற முத்திரை இருந்து இருக்கும். கசிந்த மனுவில் அவ்வாறு நீதிமன்ற முத்திரை எதுவும் இல்லை. வேறு யாராவது வெளியிட்டு இருந்தால் கண்டிப்பாக அது சட்டப்படி குற்றம். மனுதாரர் தரப்பு புகார் அளிக்காததால், சங்கீதா தரப்பில் இருந்து இந்த மனு வெளியாகி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

