இன்று மாலை 6 மணி வரை டாஸ்டாக் கடைகளை மூட திடீர் உத்தரவு.! இதுதான் காரணமா?
TVK Vijay: வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் தவெக நிர்வாகிகளை இன்று விஜய் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 4 முனை போட்டி
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளது. தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் எப்போதும் இல்லாத வகையில் இம்முறை விஜய் வருகையால் திமுக, அதிமுக, நாதக, தவெக கட்சிகளுக்கு இடையே நான்கு முனைப்போட்டி நிலவுகிறது.
தவெக தலைவர் விஜய்
இந்நிலைகள் கரூர் சம்பவத்திற்கு பிறகு பரப்புரையில் ஈடுபடமால் தவெகவினர் அமைதி காத்து வந்த நிலையில் மீண்டும் மாவட்டம் வாரியாக நிர்வாகிகள் தவெக தலைவர் விஜய் சந்தித்து வருகிறார். அதன்படி, காஞ்சிபுரம், புதுச்சேரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக இன்று வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் தவெக நிர்வாகிகளை இன்று விஜய் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
வேலூரில் விஜய் பரப்புரை
இந்த நிகழ்ச்சியில் 4,900 பேர் மட்டுமே பங்கேற்க போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். இந்த 4,900 பேருக்கும் கியூ ஆர் கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி மதியம் 12 முதல் 3 மணி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கடும் வெயிலால் வட மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் என்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மேற்கூரைகள் அமைப்பு
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக முதல் முறையாக மேற்கூரைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் கர்ப்பிணி பெண்கள், சிறுவர், சிறுமியர், மூத்த குடிமக்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக விஜய்யின் பிரச்சார வாகனத்தை யாரும் பின்தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் மூடல்
இதனிடையே வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் இன்று நடைபெறும் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்வை அடுத்து அப்பகுதியை சுற்றியுள்ள டாஸ்மாக் கடையை இன்று மாலை 6 மணி வரை மூட மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

