MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Vegetable Price: இனி தினமும் விஜிடபுள் பிரியாணிதான்.! கூடை கூடையாய் விற்று தீர்ந்த காய்கறிகள்.!

Vegetable Price: இனி தினமும் விஜிடபுள் பிரியாணிதான்.! கூடை கூடையாய் விற்று தீர்ந்த காய்கறிகள்.!

Vegetable Price: தமிழகத்தில் தொடர் மழை பெய்தாலும், கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய காய்கறிகளின் விலை கட்டுக்குள் இருந்து, இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
Vedarethinam Ramalingam
Published : Nov 17 2025, 09:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பை, கூடைகளுடன் குவிந்த பெண்கள்
Image Credit : Asianet News

பை, கூடைகளுடன் குவிந்த பெண்கள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், கோயம்பேட்டு சந்தையில் இன்று காய்கறி வரத்து அதிகரித்திருப்பது விலையை கட்டுக்குள் வைத்திருக்க உதவியுள்ளது. பொதுவாக மழைக்காலங்களில் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் இன்று அதற்கு மாறாக பல காய்கறிகளும் மிகவும் குறைந்த விலையில் கிடைத்ததால் இல்லத்தரசிகள் முகத்தில் புன்னகை துளிர்த்தது.

24
வாங்கிச்செல்ல கணக்கு பார்க்கவில்லை
Image Credit : Google

வாங்கிச்செல்ல கணக்கு பார்க்கவில்லை

பெரிய வெங்காயம் கிலோக்கு ₹7  முதல் 15 வரையிலும், சின்ன வெங்காயம் ₹30 முதல் 70 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி ₹17 முதல் 28 என வழக்கத்தை விட குறைந்த விலையில் கிடைக்கின்றன. வரத்து அதிகரித்ததால் குறிப்பாக தக்காளியும் வெங்காயமும் விலை ஏறாமல் நிலைத்திருக்கிறது. இதனால் இன்று கணக்கே பார்க்கத் தேவையில்லை!” என்று பலரும் கூடுதல் பைகளில் காய்கறிகளை வாங்கி நிரப்பிச் சென்றனர்.

பீட்ரூட்  அதிகபட்சமாக 20 ரூபாய்க்கும் குறைந்தபட்சம் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு ₹21 – 37, முட்டைக்கோஸ் ₹10 – 15, சௌ சௌ ₹10 – 15, வாழைப்பூ ₹6 – 12, வாழைத்தண்டு ₹10 – 15 போன்றவை எல்லாம் குடும்பங்களுக்கு ஏற்ற விலையில் இருந்தன. மழைக்காலத்தில் கூட இவ்வளவு மலிவு விலை கிடைத்தது எனப் பலரும் ஆச்சரியப்பட்டனர்.

Related Articles

Related image1
விவசாயிகள் வங்கி கணக்கில் முன் கூட்டியே வந்து விழப்போகுது பணம்.! தேதி குறித்த தமிழக அரசு
Related image2
அரை ஏக்கரில் லட்சக்கணக்கில் லாபம்..! குறைந்த முதலீட்டில் அதிக வருமானம்..!
34
பூண்டு குழம்பு தேவையில்லை
Image Credit : our own

பூண்டு குழம்பு தேவையில்லை

அதே சமயம் பட்டர்பீன்ஸ் (₹68 – 90), அவரைக்காய் (₹70 – 130), பச்சை பட்டாணி (₹70 – 80), இஞ்சி (₹70 – 90) போன்ற சில காய்கறிகள் மட்டும் சற்று உயர்ந்த விலையில் இருந்தன. பூண்டு விலையும் வழக்கம்போல் அதிகம்; பெரிய பூண்டு ₹350 – 520 வரை. 

44
மழையிலும் பொங்கிய சந்தோஷம்
Image Credit : our own

மழையிலும் பொங்கிய சந்தோஷம்

மொத்தத்தில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெய்யும் மழையின் பின்னணியிலும், கோயம்பேட்டில் வரத்து அதிகரித்ததால் விலை உயர்வு ஏற்படாமல்  இருப்பது பொதுமக்களுக்கு பெரிய நிம்மதி அளிக்கிறது. “இது ரெயினும், ரேட்டும் பாராட்டக் கூடிய நாள்!” என்று சந்தைக்கு வந்த பலர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வணிகம்
வணிக யோசனை
வணிக உரிமையாளர்
காய்கறி விலை
தக்காளி
வெங்காயம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved