MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 100க்கும் மேற்பட்ட கார்கள்! கெத்து காட்டிய நிர்வாகிகள்! உற்சாகத்தில் செங்கோட்டையன்! அலறும் இபிஎஸ்!

100க்கும் மேற்பட்ட கார்கள்! கெத்து காட்டிய நிர்வாகிகள்! உற்சாகத்தில் செங்கோட்டையன்! அலறும் இபிஎஸ்!

Sengottaiyan: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனுக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக நிர்வாகிகள் செங்கோட்டையனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். 

1 Min read
vinoth kumar
Published : Sep 11 2025, 05:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
செங்கோட்டையன்
Image Credit : Google

செங்கோட்டையன்

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றியணைக்கும் பணியை 10 நாட்களுக்குள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்க வேண்டும். இல்லையென்றால் பிரிந்தவர்களை இணைக்கும் பணியில் ஈடுபடுவேன் என செங்கோட்டையன் எச்சரித்திருந்தார். இதனையடுத்து அடுத்த நாளே செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சி பொறுப்புகளில் அதிரடியாக நீக்கினார்.

24
டிடிவி.தினகரன்
Image Credit : Asianet News

டிடிவி.தினகரன்

இதனையடுத்து செங்கோட்டையனுக்கு ஓபிஎஸ், டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். மேலும் அதிமுக நிர்வாகிகள் தங்களது ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு அனுப்பி வைத்தனர். அடுத்த நகர்வு குறித்து செங்கோட்டையன் நிர்வாகிகளுடன் அவரது இல்லத்தில் அவ்வப்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

Related Articles

Related image1
அதிகாலையில் கதி கலங்கி போன கள்ளக்குறிச்சி! மொட்டை மாடியில் த* இல்லாத உடல்கள்! விசாரணையில் பகீர்!
Related image2
ஜெயலலிதா அருள் வேண்டுமா..? குண்டு கல்யாணத்திற்கு வாழ்வளியுங்கள்..! எடப்பாடிக்கு வந்த அன்பு கட்டளை..!
34
நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள்
Image Credit : Asianet News

நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள்

இந்நிலையில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 10க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கார்களில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சந்திக்க அவரது இல்லத்திற்கு வருகை தந்தனர். அமமுக துணை பொதுச்செயலாளர் சண்முகவேலு தலைமையிலான மேற்கு மாவட்டங்களை சேர்ந்த அமமுவினர் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

44
 அமமுக துணை பொதுச்செயலாளர் சண்முகவேலு
Image Credit : Asianet News

அமமுக துணை பொதுச்செயலாளர் சண்முகவேலு

சண்முகவேலு உள்பட சில நிர்வாகிகள் மட்டும் செங்கோட்டையனை 15 நிமிடங்கள் தனியாக சந்தித்து பேசினர். அதனைத் தொடர்ந்து, அமமுக துணை பொதுச்செயலாளர் சண்முகவேலு செய்தியாளர்கள் சந்திப்பில்: அமமுக மேற்கு மண்டலம் சார்பில் அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைய வேண்டும் எனக்கூறிய செங்கோட்டையனை சந்தித்துள்ளோம் மற்றவை அனைத்தும் தலைவர் டிடிவி தினகரன் சொல்வார். நாங்கள் நிர்வாகிகள் எங்களினால் எந்த கருத்துகளையும் சொல்ல இயலாது. எல்லோரும் இணைய வேண்டும் என தலைவர் டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் உள்ளனர். நாங்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம்‌ என்றார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
செங்கோட்டையன்
அரசியல்
டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved