MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வேறு வழியில்லாமல் நீதிமன்றம் படியேறிய டிடிஎப் வாசன்! வெறும் கையோடு திருப்பி அனுப்பிய கோர்ட்!

வேறு வழியில்லாமல் நீதிமன்றம் படியேறிய டிடிஎப் வாசன்! வெறும் கையோடு திருப்பி அனுப்பிய கோர்ட்!

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிவேகமாக பைக் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. உரிமத்தை மீண்டும் வழங்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

1 Min read
vinoth kumar
Published : Aug 12 2025, 02:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இந்நிலையில் டிடிஎஃப் வாசன் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. அவரது பைக் பல அடி தூரத்துக்கு பறந்து போய் விழுந்தது.

24
Image Credit : Google

இந்த சம்பவத்தை அடுத்து, அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமினில் வெளிவந்தார்.

Related Articles

Related image1
திடீர் மாரடைப்பு! திருச்சி முன்னாள் மேயர் துடிதுடித்து உயிரிழப்பு!
Related image2
குழந்தைகளை கொடூரமான கொன்ற குன்றத்தூர் அபிராமி எடுத்த அதிரடி முடிவு!
34
Image Credit : our own

இதற்கிடையே அதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டுவருதாக கூறி டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார்.

44
Image Credit : istock

இந்நிலையில் ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் வழங்கக்கோரி டிடிஎஃப் வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி மாலா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டிடிஎஃப் வாசனின் கோரிக்கையை ஏற்க மறுத்ததோடு, ஆறு மாதங்கள் கடந்து விட்டால் லைசென்ஸ் கோரி நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என்றில்லை. உரிய அதிகாரிகளை அணுகலாம் எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை உயர் நீதிமன்றம்
தமிழ்நாடு
விபத்து

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved