MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அதிகாலையில் அதிர்ச்சி! திருவண்ணாமலை அருகே கார்- அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல்! 4 பேர் பலி!

அதிகாலையில் அதிர்ச்சி! திருவண்ணாமலை அருகே கார்- அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல்! 4 பேர் பலி!

Tiruvannamalai Accident: திருவண்ணாமலை அருகே கார் மற்றும் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் புதுச்சேரியை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Apr 13 2025, 10:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Tiruvannamalai Car Accident

Tiruvannamalai Car Accident

கார் - அரசு பேருந்து மோதல்

திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடி அடுத்துள்ள காட்டுக்குளம் பகுதியில் அதிகாலையில் காரும் அரசு பேருந்தும் கண்ணிமைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த புதுச்சேரியை சேர்ந்த சைலேஷ், சதீஷ் குமார், ஸ்டாலின், சாருஷ் உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். 

இதையும் படிங்க: அந்தரத்தில் பறந்து விழுந்த இளம்பெண்! விபரீதத்தில் முடிந்த பொருட்காட்சி கொண்டாட்டம் - விருதுநகரில் பரபரப்பு

23
Tiruvannamalai Accident

Tiruvannamalai Accident

4 பேர் உடல் நசுங்கி பலி

இந்த சம்பவம் தொடர்பாக அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த 4 பேரின் உடல்களை நீண்ட நேரம் போராடி மீட்டனர். பின்னர் உடல்களை உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க:  குடையில்லாமல் வெளியே போகாதீங்க! இன்று இடி, மின்னலுடன் மழை இருக்காம்! வானிலை மையம்!

33
Police investigation

Police investigation

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் புதுச்சேரியில் இருந்து பெங்களூரு நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் காட்டுக்குளம் வந்து கொண்டிருந்த போது தூக்க கலக்கத்தில் இருந்த ஓட்டுநர் திருவண்ணாமலையில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது தெரியவந்துள்ளது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில்  நண்பர்கள் 4 உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விபத்து
தமிழ்நாடு
திருவண்ணாமலை
காவல் நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மத்திய அரசு பட்ஜெட் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது - வைகோ விமர்சனம்..!
Recommended image2
Now Playing
டாப் Engine நம்ம தான் அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இதெல்லாம் திமுக - தவெக தலைவர் விஜய் பேச்சு
Recommended image3
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய், ஒரு விஜி ஓட்டு போடுவாங்க‌.. ஏன்டா இவன கூப்பிட்டோம்னு வருத்தப்படுவீங்க.. விஜய் மாஸ் பேச்சு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved