MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நடிகை சாந்தினி ஞாபம் இருக்கா! 3 ஆண்டுகளுக்கு பிறகு வந்த வழக்கு விசாரணை

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நடிகை சாந்தினி ஞாபம் இருக்கா! 3 ஆண்டுகளுக்கு பிறகு வந்த வழக்கு விசாரணை

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி நடிகை சாந்தினி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். சமரசம் செய்யப்பட்டதாக அரசு தெரிவித்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை ஏன் எதிர்க்கவில்லை என கேள்வி.

1 Min read
vinoth kumar
Published : Sep 23 2025, 12:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
Image Credit : Asianet News

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இந்த நிலையில் மணிகண்டன் தன்னுடன் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்துவந்ததாகவும், அதன் காரணமாக தான் மூன்று முறை கர்ப்பமடைந்ததாகவும், திருமணம் செய்துகொள்வதாகக் கூறியதைத் தொடர்ந்து கர்ப்பத்தைக் கலைத்ததாகவும், ஆனால் திருமணம் செய்துகொள்ளாமல் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் திரைப்படத் துணை நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார்.

24
சென்னை உயர்நீதிமன்றம்
Image Credit : istock

சென்னை உயர்நீதிமன்றம்

அதன் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை முதலில் மாவட்ட நீதிமன்றம், பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின் ஜாமீனில் வெளியில் வந்தார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் மணிகண்டனும், சாந்தினியும் சமரசம் செய்து கொண்டனர். அதனடிப்படையில் மணிகண்டன் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

Related Articles

Related image1
ஆசை ஆசையாய் காதல் திருமணம்! அதிகாலையில் கார்த்திகா செய்த வேலை! பார்க்க கூடாததை பார்த்த கணவர்!
Related image2
அதுவும் செல்போன் கடையில் இப்படியா? காதலனுடன் வீடியோ காலில் பேசியபடியே கல்லூரி மாணவி செய்த சம்பவம்!
34
சாந்தினி
Image Credit : Asianet News

சாந்தினி

இந்த நிலையில் மணிகண்டன் தனக்குச் சில ஒப்பந்தங்கள் செய்து கொடுத்ததாகவும், ஆனால் அதைச் செய்து கொடுக்காமல் வழக்கை நான் வாபஸ் பெற்று, அவர் விடுவிக்கப்பட்டதிலிருந்து தன்னைச் சந்திக்காமல் தலைமறைவாகிவிட்டதாகவும் நடிகை சாந்தினி குற்றம்சாட்டினார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய கோரி நடிகை சாந்தினி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

44
 உச்சநீதிமன்றம்
Image Credit : Google

உச்சநீதிமன்றம்

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமரசம் செய்யப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு அரசு தகவல் சொன்ன நிலையில், அதற்கு நடிகை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் சென்னை  உயர்நிதிமன்ற உத்தரவை எதிர்த்து ஏன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமினை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved