MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆசை ஆசையாய் காதல் திருமணம்! அதிகாலையில் கார்த்திகா செய்த வேலை! பார்க்க கூடாததை பார்த்த கணவர்!

ஆசை ஆசையாய் காதல் திருமணம்! அதிகாலையில் கார்த்திகா செய்த வேலை! பார்க்க கூடாததை பார்த்த கணவர்!

திண்டுக்கல்லில், மூன்று மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட கார்த்திகா என்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கணவருடன் வசித்து வந்த நிலையில், இவரது மரணம் குறித்து போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min read
vinoth kumar
Published : Sep 23 2025, 11:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
காதல் திருமணம்
Image Credit : Asianet News

காதல் திருமணம்

தற்போதைய காலக்கட்டத்தில் காதல் திருமணம் என்பது ஒரு பேஷனாகிவிட்டது. காதலிக்கும் போது ஆசை ஆசையாய் காதலிக்கும் ஜோடிகள், திருமணத்திற்கு அப்படியே மொத்தமாக மாறிவிடுகிறார்கள். சின்ன சின்ன பிரச்சனை என்றாலும் அதை எதிர்கொள்ள முடியால் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இந்நிலையில் காதல் திருமணம் செய்த இளம்பெண் 3 மாதங்களில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

24
காதல் திருமணம்
Image Credit : stockPhoto

காதல் திருமணம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் சங்கர் (26). திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே பெரியகோட்டையில் உள்ள செங்கல் சூளையில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் மன்னார்குடியை சேர்ந்த உறவினரான கார்த்திகா (25) என்பவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் இரு வீட்டார் பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

Related Articles

Related image1
அதுவும் செல்போன் கடையில் இப்படியா? காதலனுடன் வீடியோ காலில் பேசியபடியே கல்லூரி மாணவி செய்த சம்பவம்!
Related image2
எந்த வேலையாக இருந்தாலும் 9 மணிக்குள்ள முடிக்க பாருங்க மக்களே! இன்று தமிழகம் முழுவதும் மின்தடை அறிவிப்பு!
34
 தூக்கிட்டு தற்கொலை
Image Credit : pinterest

தூக்கிட்டு தற்கொலை

இதையடுத்து சங்கர் கார்த்திகா தம்பதியினர், சங்கர் வேலை பார்க்கும் செங்கல் சூளை அருகில் உள்ள பெரியகரட்டுப்பட்டி என்ற ஊரில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தனர். அதே பகுதியில் உள்ள பேக்கரி கடை ஒன்றில் கார்த்திகா கணக்காளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி 2 பேரும் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்து தூங்கியிருக்கிறார்கள். நேற்று அதிகாலையில் சங்கர் எழுந்து பார்த்த போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது கார்த்திகா வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சடலமாக தொங்கியுள்ளார்.

44
ஆர்.டி.ஓ. விசாரணை
Image Credit : our own

ஆர்.டி.ஓ. விசாரணை

இதுகுறித்து அம்பிளிக்கை போலீசாருக்கு கணவர் தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கார்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கார்த்திகாவுக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திருமணம்
தமிழ்நாடு
காவல்
பெண்கள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved