MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கரும்பு விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்! வங்கி கணக்கில் கொட்டப்போகும் பணம்! வெளியான சூப்பர் அறிவிப்பு!

கரும்பு விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்! வங்கி கணக்கில் கொட்டப்போகும் பணம்! வெளியான சூப்பர் அறிவிப்பு!

Sugarcane Farmers: கரும்பு சாகுபடிப் பரப்பினை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்தவும் திமுக அரசால் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 28 2026, 06:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கரும்பு விவசாயிகள்
Image Credit : our own

கரும்பு விவசாயிகள்

கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இதில் 2025-26 அரவைப் பருவத்தில் 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளும் மற்றும் 15 தனியார் சர்க்கரை ஆலைகளும் கரும்பு அரவைப் பணியை மேற்கொண்டுள்ளன. கரும்பு விவசாயிகளின் மீது அக்கறை கொண்ட திமுக அரசு கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காகவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரும்பு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.

25
விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு சிறப்பு ஊக்கத்தொகை
Image Credit : Google

விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு சிறப்பு ஊக்கத்தொகை

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, 2025-26ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், 2024-25 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, டன் ஒன்றுக்கு ரூ.349 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்து, 90,652 கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.246.14 கோடி நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
திமுகவில் இணைந்த கையோடு ஓபிஎஸ் சொன்ன அந்த வார்த்தை! அலறும் இபிஎஸ்! அதிர்ச்சியில் தென் மாவட்ட அதிமுக
Related image2
பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! மூன்று நாட்கள் தொடர் விடுமுறை! குஷியில் அரசு ஊழியர்கள்!
35
 திமுக ஆட்சி
Image Credit : our own

திமுக ஆட்சி

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றவுடன், ஒன்றிய அரசு நிர்ணயம் செய்த கரும்பு விலைக்குமேல் சிறப்பு ஊக்கத்தொகையாக முறையே 2020-21 அரவைப் பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.192.50 எனவும், 2021-22 மற்றும் 2022-23 அரவைப் பருவங்களுக்கு ரூ.195 எனவும், 2023-24 அரவைப் பருவத்திற்கு ரூ.215 எனவும் 2024-25 அரவைப் பருவத்திற்கு ரூ.349 எனவும் வழங்கி கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.2,750 லிருந்து ரூ.3,500 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு 2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சியில் சிறப்பு ஊக்கத்தொகையாக 5,77,755 கரும்பு விவசாயிகளுக்கு மொத்தம் சுமார் ரூ.1,094.27 கோடி வழங்கப்பட்டுள்ளது.

45
கரும்பு கிரயத் தொகை
Image Credit : our own

கரும்பு கிரயத் தொகை

கரும்பு விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் 2025-26ஆம் அரவைப் பருவத்திற்கு கரும்பு அனுப்பும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு கிரயத் தொகையை தாமதமின்றி விரைந்து வழங்கிட ஏதுவாக போதிய நிதி ஆதாரம் இல்லாத தர்மபுரி, எம்.ஆர்.கே., மதுராந்தகம், திருத்தணி, செய்யார், செங்கல்ராயன், மோகனூர், வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் அறிஞர் அண்ணா, பெரம்பலூர் ஆகிய 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் சேர்த்து மொத்தம் 11 சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.86.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார்கள். இதன் மூலம் சுமார் 17,991 கரும்பு விவசாயிகள் பயன் பெறுவர்.

55
சர்க்கரை ஆலைகள்
Image Credit : our own

சர்க்கரை ஆலைகள்

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதல், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் வரலாற்றில் முதன்முறையாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் கரும்பு கிரயத் தொகை தாமதமின்றி வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட சுமார் ரூ.2031.47 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது. கரும்பு சாகுபடிப் பரப்பினை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்தவும் கழக அரசால் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு, கரும்பு விவசாயிகளின் நலனுக்காகவும், சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்காகவும் சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் கரும்பு கிரயத் தொகையை உரிய காலத்தில் வழங்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துவரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கரும்பு விவசாயிகளின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்துக் கொண்டார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு
திமுக
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது கூடுதல் வலிமை சேர்ந்திருப்பதாக வரவேற்று மகிழ்கிறோம் ! திருமாவளவன் பேட்டி
Recommended image2
மீண்டும் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்.. இபிஎஸ் பக்கம் சாய்ந்த வெல்லமண்டி நடராஜன்!
Recommended image3
சங்கீதா முடிவின் பின்னணியில் அரசியல் சதி?.. விஜய்யை முடக்கும் 'மெகா' கட்சி?.. தவெகவினர் புலம்பல்!
Related Stories
Recommended image1
திமுகவில் இணைந்த கையோடு ஓபிஎஸ் சொன்ன அந்த வார்த்தை! அலறும் இபிஎஸ்! அதிர்ச்சியில் தென் மாவட்ட அதிமுக
Recommended image2
பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! மூன்று நாட்கள் தொடர் விடுமுறை! குஷியில் அரசு ஊழியர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved