- Home
- Tamil Nadu News
- பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! மூன்று நாட்கள் தொடர் விடுமுறை! குஷியில் அரசு ஊழியர்கள்!
பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! மூன்று நாட்கள் தொடர் விடுமுறை! குஷியில் அரசு ஊழியர்கள்!
மாசிமகத் திருவிழாவினை முன்னிட்டு மார்ச் 02ம் தேதி (திங்கட்கிழமை) அன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை.

கும்பகோணம்மாசி மக திருவிழா
தமிழகத்தில் கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயங்கள் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பது வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கும்பகோணம்மாசி மக திருவிழாவை முன்னிட்டு வருகிற மார்ச் 2ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2 பள்ளி, கல்லூரி விடுமுறை
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இவ்வாண்டு கொண்டாடப்படவுள்ள மாசிமகத் திருவிழாவினை முன்னிட்டு மார்ச் 02ம் தேதி (திங்கட்கிழமை) அன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது.
மார்ச் 14ம் தேதி வேலை நாள்
இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக மார்ச் 14ம் தேதி (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் மேற்படி நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், நிறுவனங்களும் இயங்கிட அனுமதித்தும் ஆணையிடப்படுகிறது.
அரசு அலுவலகங்கள் செயல்படும்
மேற்படி உள்ளூர் விடுமுறை நாள், செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் உட்படாது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிளை கருவூலங்களும் மேற்படி உள்ளூர் விடுமுறை நாளான மார்ச் 02 (திங்கட்கிழமை) அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு இயங்கிடவும் ஆணையிடப்படுகிறது என அம்மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை
அதற்கு முந்தை நாளான பிப்ரவரி 28 சனிக்கிழமை, மார்ச் 1 ஞாயிறு வார விடுமுறை வருகிறது. இதனால் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தொடர்ந்து மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைப்பதால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குஷியில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.

