- Home
- Tamil Nadu News
- பள்ளி மாணவர்கள்.. அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மார்ச் 4, 10ம் தேதி விடுமுறை..
பள்ளி மாணவர்கள்.. அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மார்ச் 4, 10ம் தேதி விடுமுறை..
Holiday: அய்யா வைகுண்டர் அவதார விழாவை ஒட்டி வரும் மார்ச் 4ம் தேதி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் விழாவை ஒட்டி மார்ச் 10ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குஷியில் பள்ளி மாணவர்கள்
தமிழகத்தில் பொது விடுமுறையை தவிர்த்து பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயங்கள், தலைவர்களின் நினைவு நாள் மற்றும் பிறந்தநாள் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பது வழக்கம். அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
மார்ச் 4,10ம் தேதி விடுமுறை
இந்நிலையில் அய்யா வைகுண்டரின் அவதார விழா ஒவ்வொரு ஆண்டும் விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அய்யா வைகுண்டசாமியின் 194-வது அவதார திருநாளை முன்னிட்டு மார்ச் 4 மற்றும் மார்ச் 10ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது
அதாவது அய்யா வைகுண்டர் அவதார விழாவை ஒட்டி வரும் மார்ச் 4ம் தேதி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் விழாவை ஒட்டி மார்ச் 10ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது.
சனிக்கிழமைகள் வேலை நாளாக அறிவிப்பு
மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு இயங்கும். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 7 மற்றும் 14ம் தேதி சனிக்கிழமைகள் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 4ம் தேதி 4 மாவட்டங்களுக்கு விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அடுத்தடுத்து உள்ளூர் விடுமுறை வருவதால் பள்ளி மாணவர்கள் குஷியில் இருந்து வருகின்றனர். ஏற்கனவே தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு மார்ச் 4ம் தேதி புதன் கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

