MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மாணவர்களுக்கு குட் நியூஸ்.! பள்ளிகள் திறப்பு தள்ளி போகிறது.? தமிழக அரசு முக்கிய தகவல்

மாணவர்களுக்கு குட் நியூஸ்.! பள்ளிகள் திறப்பு தள்ளி போகிறது.? தமிழக அரசு முக்கிய தகவல்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முதல்வர் அலுவலகத்தின் அறிவிப்பிற்கு பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : May 01 2025, 11:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கொளுத்தும் வெயில்

கொளுத்தும் வெயில்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருகிறது. இதன் காரணமாக வெளியே தலைகாட்ட முடியாத நிலையானது நீடித்து வருகிறது. பகல் வேளைகளில் வீடுகளுக்குள் மக்கள் முடங்கும் நிலை நீடிக்கிறது. மேலும் வருகிற 4 ஆம் தேதி முதல் அக்னி வெயில் தொடங்கவுள்ளது. தற்போது உள்ள வெயிலை விட பல மடங்கு வெப்ப காற்று வீசப்படவுள்ளது. இதனால் அரசு சார்பாக பல விதி முன்னெச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அனல் காற்றால் தவிக்கும் மக்கள்

அனல் காற்றால் தவிக்கும் மக்கள்

பகல் 12 மணியில் இருந்து மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும் அறிவுறத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. எனவே வெயிலில் இருந்து மக்களை பாதுகாக்க அரசியல் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தலை அமைத்துள்ளது. இந்த நிலையில் தற்போது உச்சத்தை தொட்டுள்ள வெயில் ஜூலை மாதம் தான் சற்று குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Related Articles

Related image1
விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த தடை.! மீறினால் அவ்வளவு தான்- அரசு எச்சரிக்கை
Related image2
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்- தேவஸ்தானம் அதிரடி
35
பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை

எனவே ஒரு சில பள்ளிகள் புதிய கல்வி ஆண்டு ஜூன் 3ஆம் தேதி அல்லது ஜூன் 9ஆம் தேதி திறக்கப்படும் என அறிவித்துள்ளது. எனவே ஜூன் முதல் வாரத்தில் வெயிலின் தாக்கம் இன்னமும் அதிகமாக இருக்கும் என்பதால் ஜூன் இரண்டாம் வாரம் பள்ளிகளை திற்ற வேண்டும் என்ற கோரிகைக எழுந்துள்ளது. 

இந்த நிலையில் இன்று திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுமா.? என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். மே தினம் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு

45
பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா.?

பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா.?

திருச்சியில் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மே 1 தின நினைவு சின்னத்தில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவரிடம்,  வெயில் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா.? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், திருச்சி மாவட்டம் தற்போது 104 டிகிரி வெயில் உள்ளது. உரிய நேரத்தில் முடிவெடுத்து ஜூன் மாதம் 8ஆம் தேதி தெரிவித்துள்ளோம்.  அன்று வெயில் குறித்து தமிழக முதல்வர் அலுவலகம் என்ன சொல்லுகிறதே அதன்படி பள்ளி திறக்கப்படும் என கூறினார். 

55
கூடுதல் கட்டணம் - அரசு எச்சரிக்கை

கூடுதல் கட்டணம் - அரசு எச்சரிக்கை

 தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது அதிக அளவு கட்டணம் வாங்கப்படுகிறது என்ற கேள்விக்கு, அதிகம் அளவு கட்டணம் வாங்க கூடாது அதற்காக கட்டண நிர்ணய ஆணையமே வைத்துள்ளோம். முன்னாள் நீதி அரசர் தலைமையில் கமிட்டி என்ன சொல்கிறதோ நிர்ணயித்திருப்பதை  காட்டிலும் அதிக படியாக கட்டணம் வாங்கினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அன்பில் மகேஷ் கூறினார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
வெப்ப அலை
பள்ளிகள் விடுமுறை
பள்ளி மாணவர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Latest Videos
Recommended Stories
Recommended image1
Suburban Trains: சென்னை ரயில் பயணிகளே அலர்ட்! 5 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்!
Recommended image2
Now Playing
அமைதியான திருப்பரங்குன்றம்; சீரான டாஸ்மாக் விற்பனை: அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
Recommended image3
Now Playing
Ration: ரேஷன் கடைகள் டோட்டலா மாறுது.. இனி அரிசி, பருப்பு இப்படிதான் கிடைக்கும்.. தமிழக அரசு அப்டேட்!
Related Stories
Recommended image1
விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த தடை.! மீறினால் அவ்வளவு தான்- அரசு எச்சரிக்கை
Recommended image2
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்- தேவஸ்தானம் அதிரடி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved