MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.! ரூ.50,000 பரிசு! நவம்பர் 05ம் தேதி கடைசி நாள்!

பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.! ரூ.50,000 பரிசு! நவம்பர் 05ம் தேதி கடைசி நாள்!

தமிழ்நாடு அரசு, 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 'சூழல் அறிவோம்' என்ற மாநில அளவிலான வினாடி வினா போட்டியை நடத்துகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.50,000 வரை பரிசுகள் வழங்கப்படும். 

1 Min read
vinoth kumar
Published : Oct 31 2025, 05:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
 பள்ளி மாணவர்கள்
Image Credit : Google

பள்ளி மாணவர்கள்

நிதித்துறை , சுற்றச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் அவர்கள் 2025ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் “தமிழ்நாடு அரசு காலநிலைக் கல்வியறிவினை ஒரு இயக்கமாக முன்னெடுத்து, பள்ளிகளில் சூழல் மன்றங்களை விரிவுபடுத்துதல் , பள்ளி மாணவர்களுக்கான இயற்கை முகாம்கள் மற்றும் மாநில அளவிலான பல்வேறு போட்டிகள் போன்றவை நடத்தப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்கள்.

25
வினாடி வினா போட்டி
Image Credit : our own

வினாடி வினா போட்டி

அதன் அடிப்படையில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தவும் காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு “ சூழல் அறிவோம்” என்னும் தலைப்பின் கீழ் மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடத்துவதற்கு தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் முன்மொழிந்துள்ளது.

Related Articles

Related image1
மகளிர் சுய உதவிக்குழு ஆவலோடு எதிர்பார்த்த செய்தி.! தேதி குறித்த அரசு
Related image2
நாளை பள்ளி மாணவர்களுக்கு Working day-வா? இல்லையா? வெளியான அறிவிப்பு!
35
நவம்பர் 05ம் தேதி கடைசி நாள்
Image Credit : Google

நவம்பர் 05ம் தேதி கடைசி நாள்

போட்டியில் பங்குகொள்வதற்கு பதிவு செய்யவும், போட்டிக்கான விதிமுறைகளை தெரிந்துகொள்ளவும் கீழேக் கொடுக்கப்பட்டுள்ள Link ஐ Click செய்யவும். https://www.tackon.org/soozhal இப்போட்டியில் ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் இரண்டு மாணவர்களை உள்ளடக்கிய ஐந்து குழுக்கள் பதிவு செய்யவேண்டும். பதிவு செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 05ம் தேதி கடைசி நாளாகும்.

45
முதற்கட்ட சுற்று நவம்பர் 06 மற்றும் 07
Image Credit : our own

முதற்கட்ட சுற்று நவம்பர் 06 மற்றும் 07

அதேபோல் வினாடி வினா போட்டியின் முதற்கட்ட சுற்று நவம்பர் 06 மற்றும் 07 அன்று காலை 9.00 மணிக்கு தொடங்கி மாலை 5.00 மணிவரை நடைபெறும். இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 10 அணிகள் இரண்டாவது சுற்றில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த சுற்றுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

55
பரிசுகள் விவரம்
Image Credit : our own

பரிசுகள் விவரம்

மாநில அளவில் முதலிடத்தை பெற்ற குழு ரூ.50,000, மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற குழு ரூ.30,000, மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற குழு ரூ.20,000, இறுதி சுற்றுக்கு தேர்வாகிய மற்ற போட்டியாளர்கள் ரூ.5,000 வழங்கப்படும். எனவே, அனைத்து வகை நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பாசிரியர் உதவியுடன் மாணவர்களை சிறப்பான முறையில் பங்குகொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளிக் கல்வித் துறை
பள்ளி மாணவர்
பள்ளிகள்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved