MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நாளை பள்ளி மாணவர்களுக்கு Working day-வா? இல்லையா? வெளியான அறிவிப்பு!

நாளை பள்ளி மாணவர்களுக்கு Working day-வா? இல்லையா? வெளியான அறிவிப்பு!

மோன்தா புயல் காரணமாக கடந்த 28ம் தேதி சென்னையில் பள்ளிகளுக்கு விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நாளை பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மாணவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
vinoth kumar
Published : Oct 31 2025, 03:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வடகிழக்கு பருவமழை
Image Credit : our own

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் கடந்த 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பெரும்பாலான ஏரி, குளங்கள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவானது. இப்புயலுக்கு மோன்தா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

24
வெளுத்து வாங்கிய கனமழை
Image Credit : our own

வெளுத்து வாங்கிய கனமழை

இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த புயல் சென்னையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையை கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்தது. இதன் காரணமாக சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Related Articles

Related image1
காலையிலேயே பரபரப்பு! தவெகவின் தலைமை அலுவலகத்தில் குவிந்த போலீஸ்! வெளியான அதிர்ச்சி காரணம்!
Related image2
இதுவே முதல் முறை! சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது? வெளியானது அட்டவணை!
34
28ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை
Image Credit : our own

28ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

இதன் காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த 28ம் தேதி விடுமுறை என அம்மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

44
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
Image Credit : our own

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

இந்நிலையில் மோந்தா புயல் காரணமாக சென்னையில் கடந்த 28ம் தேதி பள்ளிகளுக்கு விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நாளை பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
தமிழ்நாடு
விடுமுறை
பள்ளிகள் விடுமுறை
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved