MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அன்புமணிக்கு 2 நாள் கெடு.! ராமதாஸ் எடுத்த முக்கிய முடிவு

அன்புமணிக்கு 2 நாள் கெடு.! ராமதாஸ் எடுத்த முக்கிய முடிவு

பாமகவில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் வலுத்துள்ளதால் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. இதனிடையே அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை செப்டம்பர் 3 ஆம் தேதி ராமதாஸ்  அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min read
Ajmal Khan
Published : Sep 01 2025, 01:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பாமகவில் அதிகார மோதல்
Image Credit : x

பாமகவில் அதிகார மோதல்

பாமகவில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் வலுத்துள்ளது. இதன் காரணமாக பாமக இரண்டாக உடைந்துள்ளது. அன்புமணிக்கு ஆதரவாக உள்ள நிர்வாகிகளை ராமதாசும், ராமதாசுக்கு ஆதரவாக உள்ள நிர்வாகிகளை அன்புமணியும் நீக்கி வருகிறார்கள். தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில்

 பாமகவில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு கட்சி தொண்டர்களிடம் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில், ஆகஸ்ட் 17 அன்று நடந்த சிறப்பு பொதுக்குழுவில் ராமதாஸ் தன்னை கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக தொடர்ந்து அறிவித்து, அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்து 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

25
அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுக்கள்
Image Credit : facebook / ramadoss

அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுக்கள்

கட்சி நிர்வாகத்தில் அதிகார துஷ்பிரயோகம், கூட்டணி முடிவுகளில் தன்னிச்சையான செயல்படுதல், கட்சி மாநாடுகளில் ராமதாஸ் மீது பொது விமர்சனம், கட்சி நிதியில் ஏமாற்று முறைகள், மாவட்ட அளவிலான நிர்வாகிகளை தவறாக நியமனம் செய்தல், கட்சி உறுப்பினர்களை பிரிவினை செய்தல். கட்சி ஒழுங்கு மீறல், தலைமைக்கு எதிரான செயல்கள், போன்ற 16 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. 

இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க ஆகஸ்ட் 31 வரை கெடு விதிக்கப்பட்டது. ஆனால் அன்புமணி தரப்பில் இருந்து தற்போது வரை எந்த வித பதிலும் அளிக்கவில்லை. இதனையடுத்து இன்று தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையிலான 8 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது.

Related Articles

Related image1
52 மாதங்கள் முடிஞ்சு போச்சு! இனியும் சும்மா இருக்க முடியாது! திமுக அரசுக்கு வார்னிங் கொடுத்த ஆசிரியர்கள்!
Related image2
இந்திய அரசுக்கு எதிராக சசிகாந்த் செந்தில் சூழ்ச்சி..? அம்பலமான இலங்கை விசிட்... ஷாக் பின்னணி..!
35
விளக்கம் கேட்டு நோட்டீஸ்
Image Credit : facebook / ramadoss

விளக்கம் கேட்டு நோட்டீஸ்

இந்த கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக பாமக எம்எல்ஏ அருள் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாளை பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து நாளை மறுதினம் நிர்வாக குழு கூட்டமானது நடைபெறுகிறது. அப்போது செய்தியாளர்களை ராமதாஸ் சந்திப்பார் சந்திக்கும்போது ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான தகவலை தெரிவிப்பார் என கூறினார். ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தவர் ராமதாஸ், ஒழுங்கு நடவடிக்கை கொடுத்த அறிக்கையை ஏற்றுக் கொள்வதற்கும் மாற்றியமைப்பதற்கு அவருக்கு முழு அதிகாரம் உள்ளது.

45
அன்புமணிக்கு 2 நாள் அவகாசம்
Image Credit : google

அன்புமணிக்கு 2 நாள் அவகாசம்

ஒழுங்கு நடவடிக்கை குழு என்பது ஒரு ஆலோசனை குழு மட்டுமே, இறுதியான முடிவெடுக்கக்கூடிய குழு அல்ல என தெரிவித்தார். இதுவரை அன்புமணி எந்தவித விளக்கமும் கொடுக்கவில்லை. ஒருவேளை 31ஆம் தேதி பதில் அளித்து இருந்தால் நாளை அல்லது நாளை மறுதினம் தான் கடிதம் வரும். அதற்கான வாய்ப்பானது தற்போது வழங்கப்பட்டுள்ளது.

 ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையானது சீலிடப்பட்ட கவரில் பரிந்துரையை கொடுத்துள்ளேன் அதனை வெளியில் கூற முடியாது. ஒன்பது பேரும் கருத்துக்கள் தெரிவித்தனர் அதில் மெஜாரிட்டியாக ஒரு கருத்து வந்துள்ளது அதனை தெரிவித்துள்ளோம்

55
நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
Image Credit : google

நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

எனவே 3ஆம் தேதி தேதி அன்புமணி மீதான நடவடிக்கையை ராமதாஸ் அறிவிப்பார் என தெரிவித்தார். நாளைய தினம் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறுகிறது இது கட்சியின் வளர்ச்சி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. மாவட்ட தலைவர்கள் மாவட்ட செயலாளர்கள் வன்னியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என எம்எல்ஏ அருள் கூறினார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
இராமதாஸ்
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
அரசியல்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved