MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அமைச்சர் கே.என்.நேருவை முற்றுகையிட்ட நிர்வாகிகள்! அடுத்த சில நாட்களில் திமுகவில் அதிரடி மாற்றம்!

அமைச்சர் கே.என்.நேருவை முற்றுகையிட்ட நிர்வாகிகள்! அடுத்த சில நாட்களில் திமுகவில் அதிரடி மாற்றம்!

புதுக்கோட்டை மாநகர திமுகவில் நிலவும் சர்ச்சைகள் மற்றும் குழப்பங்களுக்கு தீர்வு காணும் விதமாக, கட்சி நிர்வாக வசதிக்காக அந்த மாநகரம் வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

1 Min read
vinoth kumar
Published : Jul 15 2025, 11:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழக சட்டமன்ற தேர்தல்
Image Credit : ANI

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் ஆளும் திமுக பல்வேறு வியூகங்களையும், அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எப்படியாவது மீண்டும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் செயல்படாத மாவட்ட செயலாளர்கள் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

24
புதுக்கோட்டை மாநகரம்
Image Credit : F/DMK

புதுக்கோட்டை மாநகரம்

இந்நிலையில் புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளராக இருந்த செந்தில் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததை தொடர்ந்து புதுக்கோட்டை மாநகர திமுக பொறுப்பாளராக ராஜேஷ் நியமிக்கப்பட்டார். ராஜேஷ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து புதுக்கோட்டை மாநகர திமுகவில் தொடர்ந்து சர்ச்சைகளும் குழப்பங்களும் எழுந்து வந்தது. ராஜேஷை அந்த பதவிலிருந்து நீக்க வேண்டும் என்று தொடர்ந்து புதுக்கோட்டை மாநகர திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

Related Articles

Related image1
சென்னையில் சற்று நேரத்தில் முக்கிய இடங்களில் 5 மணிநேரம் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Related image2
அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பு வந்தாச்சு! யாருக்கு எவ்வளவு?
34
அமைச்சர் கே.என்.நேரு
Image Credit : F/KN Nehru

அமைச்சர் கே.என்.நேரு

புதுக்கோட்டை மாவட்டம் உள்ளடக்கிய மண்டலத்திற்கு மண்டல பொறுப்பாளராக உள்ள கே.என்.நேரு புதுக்கோட்டை மாநகரத்தில் திமுக நிகழ்வுகளுக்கு எப்போதெல்லாம் செல்கிறாரோ அப்போதெல்லாம் திமுகவினர் ராஜேஷை மாற்றக்கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற கே.என்.நேருவை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு உள்ளே செல்ல விடாமல் வழியில் தடுத்து நிறுத்தி ராஜேஷை மாற்றவேண்டும் என்று புதுக்கோட்டை மாநகர திமுக நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

44
 திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்
Image Credit : f/duraimurugan

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்

இந்நிலையில் கழக நிர்வாக வசதிக்காகவும் கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிட புதுக்கோட்டை மாநகரம் வடக்கு, தெற்கு இரண்டாக பிரிக்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை வடக்கு மாநகரம் பொறுப்பாளராக எம். லியாகத் அலி, புதுக்கோட்டை தெற்கு மாநகரம் பொறுப்பாளராக ராஜேஷ் ஆகியோரை நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு
மு. க. ஸ்டாலின்
திமுக
துரைமுருகன், திமுக

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved