MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பு வந்தாச்சு! யாருக்கு எவ்வளவு?

அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பு வந்தாச்சு! யாருக்கு எவ்வளவு?

தமிழக அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்குவதாக அறிவித்துள்ளது. கூடுதல் விலைக்கு மது விற்ற 451 ஊழியர்களுக்கு ரூ.1,000 மட்டுமே உயர்வு.

2 Min read
vinoth kumar
Published : Jul 15 2025, 08:10 AM IST| Updated : Jul 15 2025, 08:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழக அரசு ஊழியர்கள்
Image Credit : our own

தமிழக அரசு ஊழியர்கள்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த சில நாட்களாக தமிழக அரசு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறது. அரசு ஊழியர்களை கவரும் விதமாக அவர்களின் பல நாள் கோரிக்கைகளை ஏற்று பல முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதாவது அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக் கால முன்பணம் ரூ.10,000ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தியது, அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.500ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்வு, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தப்பட்டது. இந்நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

24
டாஸ்மாக் நிறுவனம்
Image Credit : istock

டாஸ்மாக் நிறுவனம்

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவன மதுக்கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர்களுக்கு, கடந்த ஏப்ரல் முதல் தலா, ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மூன்று மாதம் கடந்தும், சட்டப்பேரவையில் அறிவித்தப்படி ஊதிய உயர்வை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

Related Articles

Related image1
செவ்வாய் கிழமை அதுவுமா! தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் பவர் கட்டா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!
Related image2
சென்னையில் அடுத்தடுத்து அதிர்ச்சி! குக்கர் வெடித்து பெண் பலி! MTC ஓட்டுநருக்கு மாரடைப்பால் பயங்கர விபத்து!
34
டாஸ்மாக் நிர்வாகம்
Image Credit : tasmac

டாஸ்மாக் நிர்வாகம்

இந்நிலையில், ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் வழங்கப்படும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

44
சம்பளம் உயர்வு
Image Credit : istock

சம்பளம் உயர்வு

அந்த வகையில், டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்த புகாரில் சிக்கிய 451 பணியாளர்களைத் தவிர, அனைத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்து விதி மீறலில் ஈடுபட்ட 451 ஊழியர்களுக்கு ரூ.1,000 ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் மாதம் முதல் முன் தேதியிட்டு இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாஸ்மாக்
டாஸ்மாக் கடை
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு
சம்பள உயர்வு
சம்பளம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved