MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சேகர் பாபு, பிரியா அட்ராசிட்டி தாங்கமுடியல... விஜயிடம் போட்டு கொடுத்த தூய்மை பணியாளர்கள்

சேகர் பாபு, பிரியா அட்ராசிட்டி தாங்கமுடியல... விஜயிடம் போட்டு கொடுத்த தூய்மை பணியாளர்கள்

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் முடிவால், ஒப்பந்தத் தொழிலாளர்கள் 12 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நடிகர் விஜய், தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Aug 12 2025, 09:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சென்னையில் அழகு தூய்மைப்பணியாளர்கள் கையில்
Image Credit : our own

சென்னையில் அழகு- தூய்மைப்பணியாளர்கள் கையில்

தமிழகத்தின் தலைநகரான சென்னையின் அழகை கட்டிகாப்பதில் தூய்மை பணியாளர்களின் பணி முக்கியமானது. ஒரு சில நாட்கள் குப்பைகள் அள்ளவில்லையென்றால் அவ்வளவு தான், சென்னையே நாரி விடும். அந்த அளவிற்கும் தினந்தோறும் பல டன்களில் குப்பைகள் கொட்டப்படுகிறது. குப்பை அள்ளும் பணியில் சென்னை மாநாகராட்சி சார்பாக ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குப்பைகள் அள்ளப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6-வது மண்டலங்களில் (ராயபுரம், திரு.வி.க. நகர்) தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் முடிவை மாநகராட்சி எடுத்துள்ளது.

24
தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்
Image Credit : Asianet News

தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்

 இதன் காரணமாக பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நிரந்தரம் மற்றும் ஊதியம் பாதிக்கப்படும் என்ற அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது மாநகராட்சியின் ஒப்பந்த ஊழியர்களாக மாதம் ரூ.22,950 பெற்று வந்தவர்களுக்கு, தனியார் நிறுவனங்களின் கீழ் பணியாற்றினால் ரூ.16,950 அல்லது பிடித்தம் போக ரூ.12,500 மட்டுமே கிடைக்கும் என்று தொழிலாளர்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். இதன் காரணமாக கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Related Articles

Related image1
சுளையா மீண்டும் 3 நாள் லீவு.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
Related image2
விஜய் மாநாட்டிற்கு ஓகே சொன்ன போலீஸ்! களத்தில் குதிக்கும் த.வெ.க.!
34
தூய்மை பணியாளர்கள் - விஜய் ஆதரவு
Image Credit : tvk

தூய்மை பணியாளர்கள் - விஜய் ஆதரவு

தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும். தற்போது பெறும் ஊதியம் ரூ.22,950 குறைக்கப்படாமல், பணி பாதுகாப்புடன் தொடர வேண்டும். தனியார் மயமாக்கப்பட்டாலும், தற்போதைய தொழிலாளர்களின் பணி இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், மற்றவர்களால் நிரப்பப்படக் கூடாது என்பன பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த போராட்டம் இன்று 12வது நாளை தொட்டுள்ளது. போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள், கட்சிகள், நடிகைகள் களத்தில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய், தூய்மை பணியாளர்களை தனது பனையூர் அலுவலகத்திற்கு அழைத்து குறைகளை கேட்டறிந்தார்.

44
சேகர்பாபுவை போட்டுக்கொடுத்த தூய்மை பணியாளர்கள்
Image Credit : instagram / priya

சேகர்பாபுவை போட்டுக்கொடுத்த தூய்மை பணியாளர்கள்

அப்போது பணியாளர்கள் கடந்த 11 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தினந்தோறும் பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் உரிய தீர்வு கிடைக்கவில்லையென கூறியுள்ளனர். மேலும் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா தங்களது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் அமைச்சர் சேகர்பாபு பேச்சுவார்த்தையின் போது கடுமையாக நடந்து கொள்வதாகவும், தூய்மை பணியாளர் பணி நிரந்தரம் தொடர்பாக திமுக தேர்தல் வாக்குறுதி தொடர்பாக கேள்விக்கு உரிய பதில் அளிக்காமல் மழுப்புவதாகவும் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய், தூய்மை பணியாளர்களுக்கு என்றும் தவெக ஆதரவாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்
டிவி.கே. விஜய்
சென்னை மாநகராட்சி
சேகர்பாபு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Related Stories
Recommended image1
சுளையா மீண்டும் 3 நாள் லீவு.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
Recommended image2
விஜய் மாநாட்டிற்கு ஓகே சொன்ன போலீஸ்! களத்தில் குதிக்கும் த.வெ.க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved