MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தேசமே அழுதுகொண்டிருக்கும் நேரத்தில் விருந்து தேவையா? இபிஎஸ்க்கு எதிராக கொதிக்கும் முன்னாள் அதிமுக பிரமுகர்!

தேசமே அழுதுகொண்டிருக்கும் நேரத்தில் விருந்து தேவையா? இபிஎஸ்க்கு எதிராக கொதிக்கும் முன்னாள் அதிமுக பிரமுகர்!

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விருந்து அளித்துள்ளார்.

1 Min read
vinoth kumar
Published : Apr 24 2025, 07:44 AM IST| Updated : Apr 24 2025, 07:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
AIADMK BJP alliance

AIADMK - BJP alliance

Edappadi Palanisamy Dinner Party To AIADMK MLAs: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. இதில், மேலும் பல்வேறு கட்சிகள் இணைய உள்ளது. இந்நிலையில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நிறைவு பெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி  பசுமை வழிச்சாலை வீட்டில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று இரவு விருந்து அளித்துள்ளார். இதில், சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வருவல், மட்டன் சுக்கா, முட்டை, இறால் தொக்கு என ஆறு வகை அவைச உணவுகள் விருந்தில் பரிமாறப்பட்டுள்ளது. 

24
Sengottaiyan Boycott

Sengottaiyan Boycott

விருந்தை புறக்கணித்த செங்கோட்டையன்

ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்தை செங்கோட்டையன் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்கள் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும்  படிங்க: இபிஎஸ் வைத்த தடபுடலான இரவு விருந்து – செங்கோட்டையன் உள்பட 4 எம்எல் ஏக்கள் புறக்கணிப்பு!

34
Edappadi Palanisamy

Edappadi Palanisamy

மருது அழகுராஜ் கேள்வி

இந்நிலையில், காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலால் தேசமே அழுதுகொண்டிருக்கும் நிலையில் பொறுப்பான பதவியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி இப்படி விருந்துண்டு மகிழலாமா என  மருது அழகுராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும்  படிங்க:  டாஸ்மாக் வழக்கு! தமிழக அரசு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்! செந்தில் பாலாஜிக்கு சிக்கலா?

44
Marudhu Alaguraj

Marudhu Alaguraj

தேசியக்கொடி கட்டிய காரில் பயணிப்பவர் எடப்பாடி

இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தேசத்தையே கண்ணீரில் மூழ்க வைத்த கதறல் ஒலி உலகையே உலுக்கியுள்ள நாளில்… முதலமைச்சராக இருந்தவர் இன்று எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் தேசியக்கொடி கட்டிய காரில் பயணிப்பவர் எடப்பாடி தனது விருந்து கொண்டாட்டத்தை தவிர்த்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் அதனை தள்ளிவைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு
அதிமுக பாஜக கூட்டணி
பயங்கரவாதத் தாக்குதல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved