- Home
- Tamil Nadu News
- தேசமே அழுதுகொண்டிருக்கும் நேரத்தில் விருந்து தேவையா? இபிஎஸ்க்கு எதிராக கொதிக்கும் முன்னாள் அதிமுக பிரமுகர்!
தேசமே அழுதுகொண்டிருக்கும் நேரத்தில் விருந்து தேவையா? இபிஎஸ்க்கு எதிராக கொதிக்கும் முன்னாள் அதிமுக பிரமுகர்!
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விருந்து அளித்துள்ளார்.

AIADMK - BJP alliance
Edappadi Palanisamy Dinner Party To AIADMK MLAs: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. இதில், மேலும் பல்வேறு கட்சிகள் இணைய உள்ளது. இந்நிலையில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நிறைவு பெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி பசுமை வழிச்சாலை வீட்டில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று இரவு விருந்து அளித்துள்ளார். இதில், சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வருவல், மட்டன் சுக்கா, முட்டை, இறால் தொக்கு என ஆறு வகை அவைச உணவுகள் விருந்தில் பரிமாறப்பட்டுள்ளது.
Sengottaiyan Boycott
விருந்தை புறக்கணித்த செங்கோட்டையன்
ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்தை செங்கோட்டையன் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்கள் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: இபிஎஸ் வைத்த தடபுடலான இரவு விருந்து – செங்கோட்டையன் உள்பட 4 எம்எல் ஏக்கள் புறக்கணிப்பு!
Edappadi Palanisamy
மருது அழகுராஜ் கேள்வி
இந்நிலையில், காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலால் தேசமே அழுதுகொண்டிருக்கும் நிலையில் பொறுப்பான பதவியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி இப்படி விருந்துண்டு மகிழலாமா என மருது அழகுராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் வழக்கு! தமிழக அரசு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்! செந்தில் பாலாஜிக்கு சிக்கலா?
Marudhu Alaguraj
தேசியக்கொடி கட்டிய காரில் பயணிப்பவர் எடப்பாடி
இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தேசத்தையே கண்ணீரில் மூழ்க வைத்த கதறல் ஒலி உலகையே உலுக்கியுள்ள நாளில்… முதலமைச்சராக இருந்தவர் இன்று எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் தேசியக்கொடி கட்டிய காரில் பயணிப்பவர் எடப்பாடி தனது விருந்து கொண்டாட்டத்தை தவிர்த்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் அதனை தள்ளிவைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.