MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பாரபட்சம் இல்லாமல் அடித்து ஆடும் ஈபிஎஸ்..! எடப்பாடியின் வருகையால் மதுரை மாநாட்டை கைவிட்ட ஓபிஎஸ்?

பாரபட்சம் இல்லாமல் அடித்து ஆடும் ஈபிஎஸ்..! எடப்பாடியின் வருகையால் மதுரை மாநாட்டை கைவிட்ட ஓபிஎஸ்?

மதுரையில் வருகின்ற 4ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட மாநாடு ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

1 Min read
Velmurugan s
Published : Sep 01 2025, 10:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
மதுரையில் மாநாடு
Image Credit : our own

மதுரையில் மாநாடு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார். பாஜக கூட்டணியில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத நிலையில், இதனை சுட்டிக்காட்டி அண்மையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து வருகின்ற செப்டம்பர் 4ம் தேதி மதுரையில் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தார்.

23
பழனிசாமி சுற்றுப்பயணம்
Image Credit : our own

பழனிசாமி சுற்றுப்பயணம்

இந்நிலையில் தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக இன்று தொடங்கி வருகின்ற 4ம் தேதி வரை பழனிசாமி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திக்க உள்ளார்.

Related Articles

Related image1
அதிமுக கட்சி விதி; வழக்கு தொடர கண்டிஷன் போட்ட நீதிமன்றம் - உச்சபட்ச கொண்டாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி
Related image2
அதிமுகவில் இணைய வந்த பலரை திமுகவுக்கு அனுப்பி வைத்ததே நீங்கள் தானே! EPS-க்கு எதிராக கொதித்த முன்னாள் நிர்வாகி!
33
மாநாடு ஒத்திவைப்பு
Image Credit : our own

மாநாடு ஒத்திவைப்பு

இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “14 - 07 - 2025 அன்று சென்னை, வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் டபெற்ற தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க செப்டம்பர் 9ம் தேதி மதுயைில் நடைபெறுவதாக இருந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டகள் உரிமை மீட்பு குழுவின் மாநில மாநாடு கழக ஒயர்மட்ட குழு ஆலோசனையின்படி ஒத்திவைக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் பிரசாரம் மேற்கொள்ளும் அதே தேதியில் மாநாடு நடைபெற்றால் கூட்டம் குறைவாக வந்துவிடும் என்பதாலேயே பன்னீர்செல்வம் மாநாட்டை ஒத்தி வைத்திருப்பதாக விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓ. பன்னீர்செல்வம் - அதிமுக
எடப்பாடி பழனிசாமி
அதிமுக பாஜக கூட்டணி
அரசியல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved