MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அதிமுக கட்சி விதி; வழக்கு தொடர கண்டிஷன் போட்ட நீதிமன்றம் - உச்சபட்ச கொண்டாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி

அதிமுக கட்சி விதி; வழக்கு தொடர கண்டிஷன் போட்ட நீதிமன்றம் - உச்சபட்ச கொண்டாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி

அதிமுக கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடர ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் ஆகியோருக்கு தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

1 Min read
Velmurugan s
Published : Aug 29 2025, 11:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அதிமுக விதியில் மாற்றம்
Image Credit : our own

அதிமுக விதியில் மாற்றம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக விதிகளில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்த திருத்தங்களை எதிர்த்தும், 2021ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை நடைபெற்ற உட்கட்சி தேர்தலை எதிர்த்தும் அந்த கட்சியின் உறுப்பினர்கள் என்று கூறிக்கொண்டு ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன் பழனிசாமி ஆகியோர் அதிமுக தொண்டர்கள் சார்பில் உரிமையியல் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

24
வழக்கு தொடர அனுமதி அளித்த தனி நீதிபதி
Image Credit : X/@EPSTamilNadu

வழக்கு தொடர அனுமதி அளித்த தனி நீதிபதி

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி வேல்முருகன் அதிமுக தொண்டர்கள் சார்பாக கட்சி விதிகள் திருத்தத்திற்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு இருவருக்கும் அனுமதி அளித்து 2022ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தார். இருவருக்கும் வழக்கு தொடர அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

Related Articles

Related image1
RSSஐ ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கும் எடப்பாடி பழனிசாமி - குண்டை தூக்கி போட்ட திருமா
Related image2
அதிமுகவில் இணைய வந்த பலரை திமுகவுக்கு அனுப்பி வைத்ததே நீங்கள் தானே! EPS-க்கு எதிராக கொதித்த முன்னாள் நிர்வாகி!
34
கட்சி உறுப்பினரே இல்லை
Image Credit : X/@EPSTamilNadu

கட்சி உறுப்பினரே இல்லை

மேலும் தற்போது விதிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ள ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகிய இருவரும் கட்சியின் அடிப்படை தொண்டர்களே கிடையாது. கட்சியின் தொண்டர்களே பொதுச்செயலாளரை பிரதிநிதிப்படுத்த முடியும். அப்படி இருக்கையில் கட்சியில் உறுப்பினரே இல்லாத ஒருவர் எப்படி வழக்கு தொடர முடியும் என்று வாதிடப்பட்டது.

44
பழனிசாமி தரப்புக்கு கிரீன் சிக்னல்
Image Credit : X/Edappadi Palanisamy

பழனிசாமி தரப்புக்கு கிரீன் சிக்னல்

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அதிமுக உறுப்பினர்களாக இல்லாத சுரேன் மற்றும் ராம்குமார் ஆதித்தன் மனு தாக்க செய்ய உத்தரவிட்டிருந்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இருந்த நெருக்கடி சற்று குறைந்துள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி அதிமுக
சென்னை உயர் நீதிமன்றம்
அரசியல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved