MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆதவ் அர்ஜூனாவின் கிறுக்குதனங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.! சீறும் மார்ட்டின் மகன்

ஆதவ் அர்ஜூனாவின் கிறுக்குதனங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.! சீறும் மார்ட்டின் மகன்

விசிகவிலிருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுன், விஜய்யின் கட்சியில் இணைந்து திமுக, பாஜகவை விமர்சித்தார். இதற்கு மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2 Min read
Ajmal Khan
Published : Apr 01 2025, 11:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Aadhav Arjuna political criticism : தமிழக அரசியல் நாள் தோறும் புதுப்புது பிரச்சனைகள் உருவாகி வருகிறது. அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த லாட்டர் அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூனுக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஒரு சில மாதங்களில் கூட்டணி கட்சியான திமுகவை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். ஆட்சியில் பங்கு தேவை, மன்னர் ஆட்சி என விமர்சித்தார். இதனால் திமுக- விசிக இடைய மோதல் உருவானது.

24

ஆதவ் அர்ஜூன் அரசியல்

இதனையடுத்து கூட்டணி விடுதலை கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூன் நீக்கப்பட்ட நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் தன்னை இணைத்துகொண்டார்.அங்கு ஆதவ் அர்ஜூனுக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

இதனையடுத்து நடைபெற்ற கூட்டங்களில் திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார். நமது தலைவர் விஜய் புலி மாதிரி அமைதியாக இருக்கும் போது திடீரென ஒரு ஆடு வந்து சம்பந்தமே இல்லாமல் வந்து, தொழிலை சம்பந்தப்படுத்தி பெண்ணை கேவலமாக பேசியிருக்கிறார்.

34

அண்ணாமலையை விமர்சித்த ஆதவ் அர்ஜூன்

ஒரு பெண்ணை கேவலமாக பேசும் தலைவரை பாஜக வைத்திருக்கும் போதே தெரிந்துவிட்டது அந்த கட்சியின் நிலைமை என கூறியிருந்தார். இது போன்ற பல விமர்சனங்களையும் கூறியிருந்தார். இந்த நிலையில் இது தொடர்பாக பிரபல லாட்டரி அதிபரி மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், ஆதவ் அர்ஜூன் பேச்சிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழக மக்களின் நலனுக்காக அயராது பாடுபடும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அர்ஜுன் ஆதவா கூறிய அவதூறான கருத்துக்கு எனது ஆட்சேபனையையும் மன்னிப்பும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

44

நற்பெயருக்கு சேதம் ஏற்படுத்துகிறார்

ஆதவ் அர்ஜூன்  தனது மாமனார் பணத்தை, அதாவது என் தந்தையின் பணத்தை தவறாகப் பயன்படுத்துகிறார், எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கிறார், தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குகிறார் என குற்றம்சாட்டியுள்ளார். அவருக்கு இருக்கும் பதவி, பொருளாதார பேரசையை தீர்த்துக்கொள்ள பல கட்சிகளில் இணைந்து வருகிறார்.  

எனவே அவரது முட்டாள்தனத்துடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதையும், அவரது செயலால் மேலும் ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டால், நீதிமன்றத்தை அணுகி எனது நற்பெயரைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்பதையும் தெளிவுபடுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன் என ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறியுள்ளார். 
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
அரசியல்
விஜய் (நடிகர்)
தமிழ் செய்திகள்
அண்ணாமலை பாஜக

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved